Skip to main content

ஓபிஎஸ் அதிமுக இணைப்பு? - மாஜி அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

Published on 08/02/2023 | Edited on 08/02/2023

 

Jayakumar explains about OPS AIADMK merger

 

ஈரோடு இடைத்தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து திமுக தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது. அதேநேரம் அதிமுக சார்பில் இ.பி.எஸ், ஓ.பி.எஸ் இருவரும் தனித்தனி வேட்பாளரை களமிறக்கினர். ஆனால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் என்பதால் ஓ.பி.எஸ் அணி சார்பாக நிறுத்தப்பட்ட வேட்பாளர் வாபஸ் பெறப்பட்டு, இ.பி.எஸ் நிறுத்திய வேட்பாளர் அதிமுக சார்பாக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார் என உறுதி செய்யப்பட்டது. ஆனால் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் இரட்டை இலைக்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்வோம்., ஆனால் இ.பி.எஸ் நிறுத்திய வேட்பாளர் தென்னரசு பெயரை சொல்லி வாக்கு சேகரிக்கமாட்டோம் என ஓ.பி.எஸ் அணியின் கு.பா.கிருஷ்ணன் தெரிவித்திருந்தார். 

 

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அரசு இயந்திரத்தை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பயன்படுத்தி அதன்மூலம் குறுக்கு வழியில் வெற்றி பெறும் முயற்சியில் திமுக ஈடுபட்டுள்ளது. திமுக அமைச்சர்கள் அங்கு முகாமிட்டு இருந்தாலும், ஒட்டு மொத்த திமுக காரர்களையும் ஈரோடு கிழக்கில் குவித்து வைத்திருந்தாலும் மகத்தான வெற்றி இரட்டை இலைக்கு கிடைக்கும். 

 

ஓபிஎஸ் இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்தினார். இப்பொழுது திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார். கசாப்புக் கடைக்காரனை ஆடுகள் நம்பினால் ஆடுகளுக்கு என்ன கதி ஆகும். அந்த கதி தான் ஓபிஎஸ் வேட்பாளருக்கும் ஆகியுள்ளது. இரட்டை இலை முடக்கப்படக் கூடாது என்பதற்காக வாபஸ் பெற்றதாக சொல்கிறார். குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று கூறுகிறார்கள். ஓபிஎஸ் இபிஎஸ் சந்திப்பிற்கு வாய்ப்பு இருக்கிறதா என கேட்கிறார்கள். அது எப்படி சந்திக்க முடியும். அதற்கு வாய்ப்புகள் என்பது 100% இல்லை. இது இடைக்கால மனு, இபிஎஸ் தாக்கல் செய்து இரட்டை இலையை நாம் பெற்றுள்ளோம். 

 

ஓபிஎஸ்-ஐ பொறுத்தவரை முழுக்க முழுக்க திமுகவின் பி-டீம் ஆக செயல்பட்டு இரட்டை இலை சின்னத்தை முடக்க நினைத்தார். தற்போது அது முடியாது என்ற காரணத்தால் பொய்ப் பிரச்சாரம் செய்கிறார். இரட்டை இலை சின்னத்தை பெற்றதில் அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள். இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்க போகிறோம் என சொல்கிறார். தென்னரசு என சொல்லுவதற்கு வாய் வலிக்கிறதா? வேட்பாளரை திரும்ப பெற்றதற்கு செங்கோட்டையன் ஓபிஎஸ்-க்கு நன்றி தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் தரப்பு கு.பா.கிருஷ்ணன் மாப்பிள்ளைக்கு நன்றி என தெரிவித்துள்ளார். செங்கோட்டையன் தனிப்பட்ட முறையில் சொல்லி இருக்கலாம். நான் சொன்னது கட்சி ரீதியாக இணைப்பு சாத்தியமில்லை

 

மீண்டும் சமாதான முயற்சியில் ஓபிஎஸ் ஈடுபடுவார் என ஓபிஎஸ் தரப்பில் சொல்கிறார்கள். அது எப்படி முடியும். அவர்களது செயல்பாடு திமுகவை சார்ந்து உள்ளது. ஓபிஎஸ் அதிமுக சமாதானம் நடக்காது” என்றார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.