Skip to main content

“அதிமுகவில் இருந்து வெளியே போனவர்கள் எல்லாம் அழிந்து போனவர்களாகதான் இருக்கிறார்கள்” ஜெயக்குமார் பேட்டி

Published on 16/05/2019 | Edited on 16/05/2019


திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட விளாச்சேரி பகுதியில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளரை சந்தித்தார். அப்போது, மீண்டும் இந்து தீவிரவாதி என கமல் கூறியது குறித்து கேள்வி ஏழுப்பப்பட்டது. அதற்கு ஜெயக்குமார், “கமல் கூறிய கருத்து ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம். எம்ஜிஆர் அவர்களின் படங்களிலும் கண்ணியம் கட்டுபாடு என அனைத்தும் இருந்தது. அதே போல் அரசியலும் இருந்தது. கமலைப் பொறுத்தவரை திரைப்படத்திலும் கண்ணியம் இல்லை அரசியலிலும் இல்லை. இந்த மாதிரி வார்த்தைகளை கூறும்போது வாங்கி கட்டி கொண்டு தான் இருக்க வேண்டும். தான் செய்தது தவறுதான் என்று கூறும்போதுதான் அனைவரும் சிறந்த மனப்பான்மையோடு ஏற்றுக் கொள்வார்கள். அதிமுக என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்று. திமுக கூட்டணி என்பது காகித ஓடம். வருகிற 23ம் தேதி காங்கிரஸ், திமுக, அமமுக, ஆகியவை அந்த நிலைமைக்குதான் வரும்”என்றார். 

 

jayakumar


அரசியலுக்கு ரஜினிகாந்த் வந்தால் அதிமுக கூட்டணி வைக்கும் என ராஜேந்திரபாலஜி கூறியது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு, “ரஜினிகாந்த் ஒன்றும் வேண்டாத மனிதர் அல்ல. எல்லோருக்கும் வேண்டியவர்தான். அதிமுகவிற்கு அவர் வந்தால் நல்லது” என்றார். மேலும் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “ஸ்டாலின் ஒரு கணக்கு வாத்தியாராக மாறியிருக்கிறார். அவர் கூட்டல் பெருக்களில் சிறந்தவராக இருக்கிறார். ஆனால், ஸ்டாலினுக்கு கழித்தல் தெரியாது 23ஆம் தேதிக்கு பின்பு அவர் கழித்தலில்தான் செல்வார். தமிழிசை தெரிவித்ததிற்கு ஸ்டாலின் நிரூபிக்க தயார் என்று தான் தெரிவிக்கிறாரே தவிர, நான் பேசவில்லை என்று அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. திமுகவிற்கு கொள்கை இலட்சியம் தொலைநோக்குப் பார்வை என எதுவும் கிடையாது. ஒன்று மட்டும்தான் உள்ளது அது அதிகாரப் பசி” என்றார்.
 

மேலும் அமமுக கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் தினகரன் குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுக அரசை கவிழ்க்க வேண்டும் என்று நினைப்பது மிகப்பெரிய துரோகம். இதை திமுக வேண்டுமானாலும் நினைக்கலாம். ஆனால், தினகரன் நினைப்பது பச்சை துரோகம். அதிமுகவில் இருந்து வெளியே போனவர்கள் எல்லாம் அழிந்து போனவர்களாகதான் இருக்கிறார்கள்.


தேர்தலுக்கு பின்பு அமமுக இருக்காது. அதிமுகவின் உண்மை தொண்டராக இருந்தால் அமமுகவில் இருந்து அதிமுகவிற்கு மீண்டும் திரும்புவார்கள். அமமுக ஒரு லெட்டர் பேடு கட்சி. வாக்கு சேகரிப்பதற்காக திருப்பரங்குன்றம் ஒட்டப்பிடாரம் அரவக்குறிச்சி சூலூர் என அனைத்து தொகுதிகளுக்கும் தினமும் செல்லும் தினகரன், இதுனாள் வரைக்கும் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்ற பின்பு நேரடியாக சென்று மக்களுக்கு நன்றி சொல்லி இருக்கிறாரா. சட்டமன்ற அலுவலகத்திற்கு கூட தினகரன் செல்லவில்லையே. கலைஞர் அவர்களால் 2003 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியை கவிழ்க்க முடிந்ததா? கலைஞர் கைது செய்யப்பட்ட போது அதிமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என்று எவ்வளவோ முயற்சிகள் எடுத்தார். கலைஞரால் அது முடிந்ததா? கலைஞரால் அவர்களால் முடியாத ஒன்று ஸ்டாலினால் எப்படி முடியும்? ஜாதி, மத ரீதியாக கமல்ஹாசன் தமிழகத்திற்கு குந்தகம் விளைவித்து அதன் மூலம் ஆதாயம் தேட நினைத்தால் சட்டத்திற்கு முன் கமல்ஹாசன் நிற்க வேண்டிய நிலை வரும்.


7 தமிழர் விடுதலை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், “சட்டமன்றத்தின் மூலம் ஒரு தீர்மானம் ஏற்படுத்தி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 7 தமிழர் விடுதலை குறித்து மாநிலம் முடிவு செய்ய வேண்டிய  நிலைக்கு வந்தபோது  ஞாயிற்றுக்கிழமை கூட அமைச்சரவை கூட்டம் உடனடியாக கூட்டப்பட்டு அமைச்சரவை முடிவு எடுத்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து நாங்கள் அழுத்தம் கொடுத்து வருகிறோம் இந்த விஷயத்தை பொருத்தமட்டில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.