Skip to main content

ஜெயலலிதா செய்தது சரி என்றால் நான் செய்ததும் சரி... ஜெ. அன்பழகன் அதிரடி பேட்டி...

Published on 07/01/2020 | Edited on 07/01/2020

 

சட்டமன்றக் கூட்டத்தொடரில் திமுக எம்.எல்.ஏ.ஜெ.அன்பழகன் கலந்துகொள்ள தடை விதித்திருக்கிறார் சபாநாயகர் தனபால். 
 

இதுதொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜெ. அன்பழகன்,
 

சட்டமன்றத்தில் இன்று ஆளுநர் உரை மீதான விவாதத்தில் திமுக சார்பில் நான் கலந்து கொண்டேன். நான் பேசும்போது திட்டமிட்டு என்னை பேசவிடாமல் அமைச்சர் பெருமக்கள், சபாநாயகர் அத்துனை பேரும் குறுக்கீடு செய்தனர். நான் பேசக்கூடாது எனது கருத்து இந்த அவையிலே இடம்பெறக்கூடாது என்பதில் அனைவரும் அக்கறையோடு இருந்தார்கள்.
 

உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர் பேசும்போது, நன்றாக நடந்தது என்று பேசினார். நான் அதற்கு பதில் அளித்து பேசுகிறபோது, முறைகேடுகளை பட்டியலிட்டு பேசினேன். உதாரணமாக மந்திரி, கலெக்டர் முன்பாக கந்தவர்கோட்டை எம்எல்ஏ ஆறுமுகம் எங்களுக்கு உதவி செய்யவில்லை, எதிர்க்கட்சிக்குத்தான் உதவி செய்தாய் என்று அரசு அதிகாரி அன்வர் அலியை ஒருமையில் திட்டியதை வாட்ஸ் அப் மூலமாக இந்த உலகமே பார்த்தது. இதனை சொன்னேன். இதனால் அவர்களுக்கு எரிச்சல், தாங்க முடியவில்லை. 
 

இதையடுத்து என்னை பேசவிடாமல் தடுக்க பார்த்தார்கள். ஒருத்தர் மாற்றி ஒருத்தர் பேசுகிறார்கள். சம்மந்தப்பட்ட அமைச்சர் பேசினால் ஒத்துக்கொள்ளலாம். முதலமைச்சர் சட்டம் ஒழுங்கில் முதலிடம் பெற்றது என்றார். எதில் முதலிடம் பெற்றீர்கள் என்று கேட்டால் முதலமைச்சருக்கு கோபம் வருகிறது. மத்திய அரசு சொல்லிவிட்டது என்கிறார்கள். எந்த மத்திய அரசு? நீங்க அடிமையாக இருக்கிற மத்திய அரசு. 
 

ஸ்டெர்லைட் ஆலை முன்பு துப்பாக்கிச் சூடு நடந்ததே அதில் முதலிடம் கொடுத்தார்களா? சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று நெல்லை கண்ணனை கைது செய்தீர்கள். குண்டு போடுவோம் காலேஜில என்று எச்.ராஜா பேசினாரே அதற்கு நடவடிக்கை எடுத்தீர்களா? நீதிமன்றம் என்ன பெரிய என்று ஒரு வார்த்தை சொன்னாரே அதற்கு ஏதாவது நடவடிக்கை எடுத்தீர்களா? பெரியார் சிலையை உடைப்போம் என்றாரே? அதற்கு நடவடிக்கை எடுத்தீர்களா? இதுதான் சட்டம் ஒழுங்கா? 


 

 

பேனர் விழுந்து ஒரு பெண் இறந்துபோனார். அது சம்மந்தமாக ஒரு அதிமுககாரரை பிடிக்க வக்கில்லை. கோர்ட் கண்டனத்திற்கு பிறகுதான் பிடித்தீர்கள். எதில் முதலிடம் நீங்க? உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் திட்டுகிறது அதில்தான் நீங்கள் முதலிடம். ஊழலில் முதலிடம். 
 

சிறுபான்மையினர் பாதுகாப்பு என அ.தி.மு.கவினர் நாடகமாடுகிறார்கள். ஆனால், அ.தி.மு.க-வும், பா.ம.க-வும் மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஆதரித்து வாக்களித்திருக்காவிட்டால் அந்த மசோதா தோற்றுப் போயிருக்கும்.


 

 

இன்று காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாடு பற்றி எரிகிறதென்றால் அதற்குக் காரணம் இந்த அ.தி.மு.க தான். இவற்றையெல்லாம் 5 நிமிடங்கள் தான் பேசியிருப்பேன். என்னிடம் நிறைய குறிப்புகள் இருந்தது. அத்தனையும் பேச வேண்டுமென்றால் இருபது நிமிடங்கள் தேவை. நான் பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார்.
 

சபாநாயகரிடம் சென்று, நான் தயாரித்த குறிப்புகளைக் காட்டி, இன்னும் 5 நிமிடங்கள் ஆளுநர் உரை மீது பேச வாய்ப்பளிக்கவேண்டும் எனக் கேட்டேன். நீங்களும் அரசியல்வாதிதான், இவ்வளவு குறிப்புகள் தயார் செய்ய வேண்டுமென்றால் எவ்வளவு நேரம் ஆகும். நான் தயாரித்து வந்ததை பேச ஐந்து நிமிடம் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டேன். ஆனால் அவர் அனுமதி வழங்காமல், பேசக்கூடாது எனக் கூறினார். அவைத் தலைவரே நான் பேசக்கூடாது என்று சொன்னால், நான் யாரை நம்பி இந்த அவைக்கு வருவது. அதனால் தான், ஆளுநர் உரையை சபாநாயகர் முன்பே கிழித்தேன். ஆளுநர் உரை கிழிக்கிற உரை அவ்வளவுதான். 

 

jayalalitha


 

ஆளுநர் உரையை கிழித்ததால்தான் உங்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். ஆளுநர் உரையை கிழித்தது சரியா?
 

அது சரியா தவறா என்று எனக்கு தெரியவில்லை. என்னுடைய உணர்ச்சியைத்தான் காட்ட முடியும். 
 

ஆளுநர் உரையை கிழித்தது ஒரு சட்டமன்ற உறுப்பினரா...?
 

ஜெயலலிதா பட்ஜெட்டையே கிழித்துப் போட்டார். கலைஞருக்கு முன்பு பட்ஜெட்டை கிழித்து போடவில்லையா? அது நியாயமா? ஆளுநர் உரை குறித்து பேச அனுமதிக்கவில்லை. அப்படியென்றால் ஆளுநர் உரை எனக்கு எதற்கு? அதனால் நான் கிழித்துப்போட்டேன். இதற்கு முன் உதாரணம் ஜெயலலிதா. அதைப்பார்த்துதான் நான் செய்தேன். ஜெயலலிதா கிழித்ததால்தான் நானும் கிழித்தேன். ஜெயலலிதா செய்தது சரிதான் என்றால் நான் செய்ததும் சரிதான். அவர் செய்தது தவறு என்றால், நான் செய்ததும தவறு. இவ்வாறு கூறினார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.