Skip to main content

கண்ணம்மாபேட்டை மயானத்தில் குவிந்த ஜெ.அன்பழகன் ஆதரவாளர்கள் (படங்கள்)

Published on 10/06/2020 | Edited on 10/06/2020



சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகன் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 62. கடந்த 2ஆம் தேதியன்று மூச்சுத் திணறலுடன் சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குக் கரோனா பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் இன்று காலை 8 மணி அளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
 


ஜெ.அன்பழகனின் இறுதிச்சடங்கு இன்று மாலை கண்ணம்மாபேட்டை மயானத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானவுடன் கட்சித் தொண்டர்கள் மயானத்திற்க்கு வெளியே காத்திருந்தனர். 
 

 

சார்ந்த செய்திகள்