ஜெ.அன்பழகன் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை முன்பு குவிந்த கட்சியினர் (படங்கள்) 

சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகன் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 62. கடந்த 2ஆம் தேதியன்று மூச்சுத் திணறலுடன் சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கரோனா பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் இன்று காலை 8 மணி அளவில் காலமானார்.

ஜெ.அன்பழகன் சிசிக்சைபெற்று வந்த தனியார் மருத்துவமனைக்கு அவரது உறவினர்கள், ஆதரவாளர்கள் தி.மு.க. நிர்வாகிகள் என பலரும் குவிந்தனர். ஜெ.அன்பழகனின் இறுதிச்சடங்கு இன்று மாலை கண்ணம்மாபேட்டை மயானத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Chromepet hospital j anbazhagan
இதையும் படியுங்கள்
Subscribe