Skip to main content

''நான் உயிரோடு இருக்கும் வரை அது நடக்காது''-ஆர்.பி.உதயகுமார் பேட்டி!

Published on 28/08/2022 | Edited on 28/08/2022

 

 "It won't happen as long as I'm alive" - ​​RB Udayakumar interview!

 

அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான சிக்கல்கள் தற்போது வரை நீடித்துவரும் நிலையில், ஒருபுறம் ஓபிஎஸ் 'அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்' என அனைவருக்கும் அழைப்பு விடுத்து வருகிறார். எடப்பாடி பழனிசாமி தரப்போ இந்த அழைப்பை ஏற்க மறுத்து வருகிறது. இந்நிலையில் நேற்று உசிலம்பட்டி அதிமுக எம்எல்ஏ ஐயப்பன் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து 'என்னைப் போன்ற மேலும் பலர் ஓபிஎஸ் பக்கம் வருவார்கள்' என ஐயப்பன் செய்தியாளர் சந்திப்பில் வெளிப்படுத்தியிருந்தார்.

 

அதேபோல் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஓபிஎஸ், 'அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட தொடர்ந்து முயற்சிகளை எடுப்பேன்' எனக் கூறியிருந்தார். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்தித்துப் பேசுகையில், ''அதிமுகவை அழிக்கும் வரை ஓபிஎஸ் ஓய மாட்டார். அதிமுகவை தனது குடும்ப சொத்தாக்கும் நோக்கில்தான் ஒன்றுசேர வேண்டும் என்ற நாடகத்தை ஓபிஎஸ் அரங்கேற்றி வருகிறார். அதிமுகவை ஓபிஎஸ் தனது குடும்ப சொத்தாக்கும் முயற்சி நான் உயிரோடு இருக்கும் வரை நடக்காது. மகாராணி போல் இருந்த சசிகலாவை சிறையில் தள்ளி அரசியல் அனாதையாக்கியவர் ஓபிஎஸ். முதல்வர் பதவிக்கு தன்னை உயர்த்திய டிடிவி தினகரனை அரசியலிலிருந்து அப்புறப்படுத்தியவர் ஓபிஎஸ். அரசியல் அடையாளம் இல்லாமல் இருந்த ஓபிஎஸ்-ஐ அழைத்து துணை முதல்வர் ஆக்கியவர் எடப்பாடி பழனிசாமி'' என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

Next Story

இறுதிக்கட்ட பரப்புரை; சேலத்தில் எடப்பாடி 'ரோட் ஷோ'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 Final campaign; Edappadi 'Road Show' in Salem

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தஙளது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரங்கஙளை நடத்தி வருகின்றனர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தேர்தல் பரப்புரை முடிவடைய இருக்கின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி 'ரோட் ஷோ' என்னும் வாகன பேரணியைத் தொடங்கியுள்ளார். சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கி சேலம் டவுன் வரை இந்த ரோட் ஷோ நடைபெறுகிறது. திறந்தவெளி வாகனத்தில் கை அசைத்தபடி வேட்பாளருடன் எடப்பாடி பழனிசாமி வாகன பேரணி நடத்தி வருகிறார். அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து வின்சென்ட், திருவள்ளுவர் சிலை, முதல் அக்ரகாரம், சின்ன கடைவீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று இறுதியாகக் கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.