Skip to main content

“அது வேலுமணிக்கு நாளை குதிக்க பயன்படுமே தவிர வேறெதுக்கும் பயன்படாது” - நாஞ்சில் சம்பத்!

Published on 23/08/2021 | Edited on 23/08/2021

 

"It will not be used for anything to Velumani other than for jumping " - Nanjil Sampath

 

தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையின் தீவிர ரெய்டுகளில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அவர்களின் பினாமிகள் எனப் பலரும் சிக்கிவருகிறார்கள். அந்த வகையில் முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏவுமான எஸ்.பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும், தமிழ்நாட்டில் அவருக்கு சொந்தமான 60 இடத்திற்கும் மேலான இடங்களில் சோதனையானது மேற்கொள்ளப்பட்டது.

 

அதில், 13 லட்சம் பணம் மற்றும் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதேபோல், சோதனை நடைபெற்ற அனேக இடங்களில் மக்களின் கூட்டமும் மிகுதியாக காணப்பட்டது. மேலும், லஞ்ச ஒழிப்புத்துறையினரால் மேற்கொள்ளப்படும் இந்த திடீர் ரெய்டுகளுக்கு அதிமுக தரப்பில் உள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இது தொடர்பாக பலரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்துவருகிற நிலையில், திராவிட இயக்கப் பேச்சாளரும், சிந்தனையாளருமான நாஞ்சில் சம்பத்தை சந்தித்து இதுகுறித்த பல முக்கிய கேள்விகளை முன்வைத்தோம். அதில் ஒரு கேள்விக்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு...  

 

"It will not be used for anything to Velumani other than for jumping " - Nanjil Sampath

 

‘உள்ளாட்சித் துறையில் இருக்கும்போது அதிக விருதுகளைப் பெற்றுள்ளோம். அதேபோல் பல்வேறு பணிகள் எல்லாம் செய்துள்ளோம். மேலும், அதிக சாலை கட்டுமானப் பணிகளைச் செய்துள்ளோம். அதற்காகத்தான் மக்கள் நன்றியுணர்வோடு இருந்தார்கள்’ என எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார். அதை எப்படி பார்க்கிறீர்கள்?

 

நீங்கள் கோவைக்குப் போனால் தெரியும். காந்திபுரம் என்கிற இடத்தில்தான் பேருந்து நிலையம் உள்ளது. அதற்கு மேலாக பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அந்தப் பாலம் வந்து இறங்குகிற இடத்தில் பேருந்து நிலையம் எதுவும் இல்லை. நான் ஆர்ப்பாட்டத்திற்காக குறிச்சி என்கிற இடத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு ஒரு பாலம் அப்படியே பாதிக்கு மேல் கட்டப்படாமல் அந்தரத்தில் பாதிலேயே நிற்கிறது. அது வேலுமணிக்கு நாளை குதிக்க பயன்படுமே தவிர, வேறெதற்கும் பயன்படாது. எதற்கு அந்தப் பாலம் அவ்வாறு பாதி கட்டாமல் நிறுத்தப்பட வேண்டும்? அதிலேயே தெரிகிறது, அவர் கோவைக்கு எதுவுமே செய்யவில்லை என்று. அதேபோல் உள்ளாட்சித்துறையை ஊழல் துறையாக மாற்றி, பல்லாயிரம் கோடி ரூபாய்களைக் கொள்ளையடித்து, ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதற்காக அவற்றை மோடி மற்றும் அமித்ஷாவுக்கு கொடுத்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Enforcement Department raid in Chennai

டெல்லியில் மத்திய போதைப் பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருள்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டது திரைப்படத் தயாரிப்பாளர் ஜாஃபர் சாதிக் தான் என்பது தெரியவந்தது. அதே சமயம் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியானது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக ஜாபர் சாதிக் தேடப்பட்டு வந்த நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் ஜெய்ப்பூரில் கடந்த மார்ச் மாதம் 9 ஆம் தேதி (09.03.2024) கைது செய்யப்பட்டு மத்திய போதைப் பொருள் தடுப்பு போலீசாரின் காவலில் இருந்து வருகிறார். இதற்கிடையே சென்னை சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டிற்கு மத்திய போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் சார்பில் சீல் வைக்கப்பட்டது.

Enforcement Department raid in Chennai

இதனையடுத்து ஜாபர் சாதிக்கின் சீல் வைத்த வீட்டை பயன்படுத்த அனுமதிக்க கோரி ஜாபர் சாதிக் வழக்கறிஞர் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு கடந்த 5 ஆம் தேதி (05.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு சீல் வைத்தது ஏன்?” என மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியது. அதற்கு, “சீல் வைத்த வீட்டை பயன்படுத்துவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை” என என்.சி.பி. தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிமன்றம் ஜாபர் சாதிக் வழக்கறிஞர் தொடர்ந்த மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து ஜாபர் சாதிக் வீட்டின் சீல் அகற்றப்பட்டது. இதற்கிடையே ஜாபர் சாதிக் மீது சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தி சட்ட விரோதப் பணப்பரிவர்த்தனை செய்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. 

Enforcement Department raid in Chennai

இந்நிலையில் சென்னை சந்தோம் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் சென்னை தியாகராய நகர் ராஜன் தெருவில் உள்ள அமீர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை நடக்கும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப். (C.R.P.F.) வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பான விசாரணைக்காக டெல்லியிலுள்ள தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் (N.C.B.) இயக்குநர் அமீர் தனது வழக்கறிஞருடன் நேரில் கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) ஆஜராகி விளக்கமளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Enforcement Department raid in Chennai

இதே போன்று சென்னையில் தியாகராயர் நகர், வண்ணாரப்பேட்டை, மயிலாப்பூர், அயனாவரம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். பிரபல உணவகத்திற்குச் சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. 

Next Story

சென்னையில் சிபிஐ சோதனை!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
CBI raid in Chennai

சென்னை பெரம்பூரில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை பெரம்பூர் நெடுஞ்சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி இளவரசன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில், இவரது வீட்டில் 6 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழுவினர் இன்று (08.04.2024) காலை 06.30 மணி முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர் கடந்த 2019ஆம் ஆண்டு ரயில்வே துறையில் இருந்து ஒய்வு பெற்றுள்ளார். அப்போது அவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் ரயில்வே பொது மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் பணியில் இருந்த காலத்தில் நடைபெற்ற மோசடி தொடர்பாக இந்த சோதனை நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பெரம்பூரில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.