Skip to main content

“ஒன்றிய அரசை எதிர்க்காமல் தமிழக அரசை எதிர்ப்பது விந்தையாக இருக்கிறது”- அமைச்சர் சேகர்பாபு!

Published on 08/10/2021 | Edited on 08/10/2021

 

It is strange to oppose the Tamil Nadu government without opposing the Union government

 

இன்று (08.10.2021) சென்னை நுங்கம்பாக்கம் ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பிரத்தியேக இணையவழி திட்டத்தைத் துவங்கி வைத்தார். இந்நிகழ்வின் போது இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் சேகர்பாபு இணையவழி முறையில் திருக்கோவில்களின் வாடகைதாரர்கள் வாடகை தொகையினை செலுத்தும் வசதியைத் தொடங்கி வைத்தார். மேலும் வாடகைதாரர்கள் சிலர் வாடகையை அமைச்சரிடமே செலுத்தி ரசீதுகளைப் பெற்றுக்கொண்டனர்.

 

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், இந்து சமய அறநிலையத்துறை இடத்தில் இருப்பவர்கள் வாடகை மற்றும் குத்தகை தொகையைச் செலுத்துவதற்கான கால அவகாசம் மாதந்தோறும் 10ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். குயின்ஸ்லாண்ட் விவகாரத்தில் அறநிலையத்துறையை அதிகாரிகளின் சட்டப்போராட்டங்களுக்கு நீதி கிடைத்திருப்பதாகத் தெரிவித்தார். ஒன்றிய அரசின் அறிவுரைப்படியே வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்கள் திறக்கப்படாமல் இருக்கிறது. பாஜகவின் போராட்டம் திசை மாறி நடந்துள்ளது. அதிகமாகக் கூட்டங்கள் கூடுகின்ற நிகழ்வுகளைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கின்றார்கள்.

 

It is strange to oppose the Tamil Nadu government without opposing the Union government

 

அந்த வகையிலேயே ஒன்றிய அரசை எதிர்த்துப் போராட வேண்டிய அந்த கட்சியினர் தமிழக அரசை எதிர்த்துப் போராடுவதுதான் விந்தையாக இருக்கின்றது. கரோனா நோய்த்தொற்று இல்லை, தாராளமாகக் கூட்டங்கள் கூட்டலாம், திருவிழாக்களுக்கு அனுமதிக்கலாம் என்று ஒன்றிய அரசிடம் இருந்து சுற்றறிக்கை பெற்றுத் தந்தால் உடனடியாக அதை நிறைவேற்றத் தமிழக அரசு தயாராக இருக்கிறது. போராட்டம் திசை மாறி நடந்து கொண்டிருக்கிறது என்பதை இந்த நேரத்தில் உணர்த்த கடமைப்பட்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.

Next Story

‘எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையில் தான் லைட் எரிகிறது - பூத் முகவர்கள் தர்ணா

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 booth agents struggle light on the lotus will light up no matter what button is pressed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் மதியம் 1 மணி நிலவரப்படி 40.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்கு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரை சின்னத்தில் லைட் எரிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வியாசர்பாடி எம்.கே.பி. நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியின் 150வது வாக்குச்சாவடியில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு லைட் எரிவதாக புகார் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து திமுக, அதிமுக பூத் முகவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் தேர்தல் நடத்தும் அலுவலகர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.