Skip to main content

“1995 வரை வெற்றி பெற்ற காங்கிரசின் தற்போதைய நிலையைப் பார்த்தால் மனம் வலிக்கிறது” - அண்ணாமலை

Published on 08/12/2022 | Edited on 09/12/2022

 

"It hurts to see the current state of the Congress which won till 1995" Annamalai

 

“இதற்கு முன் பெறு வெற்றி பெற்ற காங்கிரஸ் ஒற்றை இலக்க இடங்களை நோக்கிச் சென்று கொண்டிருப்பதைப் பார்த்தால் மனம் வலிக்கிறது. காங்கிரசின் இழப்பு என்பது யாரும் எதிர்பாராத அளவில் இருக்கிறது” எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

 

சென்னையில் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது பேசிய அவர், “டெல்லியைப் பொறுத்தவரை காங்கிரசின் ஓட்டு ஆம் ஆத்மிக்கு போகிறது. காங்கிரசின் ஓட்டு பாஜகவிற்கு வராது. கருத்தியல் ரீதியாக இரண்டும் எதிரான கட்சி. காங்கிரசின் ஓட்டுகள் ஆம் ஆத்மிக்கு சென்றதுதான் 2020ல் ஆம் ஆத்மி பெற்ற சரித்திர வெற்றி. 

 

ஆம் ஆத்மியின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணம் காங்கிரசின் வாக்குகளை காங்கிரஸ் தக்கவைக்கத் தவறியதால் தான். குஜராத்தில் காங்கிரஸ் மிக வேகமாக வீழ்ச்சியுற்று வருகிறது. 1995 வரை காங்கிரஸ் தான் வெற்றி பெற்று வந்துள்ளது. ஆனால் இன்று ஒற்றை இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருப்பதைப் பார்த்தால் மனம் வலிக்கிறது. காங்கிரசின் இழப்பு என்பது யாரும் எதிர்பாராத அளவில் இருக்கிறது. காங்கிரஸ் காணாமல் போய்க்கொண்டு இருப்பதற்கு இவை அனைத்தும் உதாரணம். 

 

திமுக கட்சி ஆரம்பித்த உடனே ஆட்சிக்கு வரவில்லை. திமுக வெற்றி பெற்ற தேர்தலை விட தோல்வி அடைந்தது அதிகம். பொறுமை அவசியம். சந்தர்ப்பத்திற்கு காத்திருக்க வேண்டும். ஒரு வார்த்தை பேசினால் அரசியலில் அந்த வார்த்தையை மீண்டும் எடுக்க முடியாது. ஒரு தலைவரைப் பற்றி ஒரு கருத்து தவறாகச் சொல்லிவிட்டால் அது உடைந்து போன கண்ணாடி மாதிரி. மீண்டும் ஒட்டி வைத்தாலும் கூட அந்தக் காயம் அதில் இருக்கும். இளைஞர்களுக்குச் சொல்லுவதெல்லாம் பொறுமையாக இருங்கள் என்பதுதான்” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.