Skip to main content

“ஈஷாவுக்கு மட்டும் தனிச்சட்டம் இல்லை” - பாஜக குஷ்பு பேட்டி

Published on 12/01/2023 | Edited on 12/01/2023

 

 'Isha does not have a separate law'-Bjp Khushbu interview

 

ஆளுநரை அவமரியாதை செய்வதுதான் திராவிட மாடலா? என குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

 

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் குஷ்பு பேசுகையில், “பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தினமும் நாம் நாளிதழ்களில் படித்துக்கொண்டு தான் இருக்கிறோம். தினமும் எங்கெல்லாம் பிரச்சனைகள் போய்க் கொண்டிருக்கின்றன என்று நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.” என்றார்.

 

அப்பொழுது செய்தியாளர் ஒருவர் ஈஷாவில் பெண் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாகக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த குஷ்பு, “விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. எந்த வகையில் அரசாங்கம் துரிதமாக விசாரணையைக் கொண்டு போகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். ஒரு பெண் உயிரிழந்திருக்கிறார். அதற்கு நல்லபடியாக விசாரணை நடக்க வேண்டும். எல்லாருக்கும் ஒரே சட்டம் தான். எனக்கு ஒரு சட்டம்; உங்களுக்கு ஒரு சட்டம்; ஈசாவில் ஒரு பிரச்சனை நடந்தால் அதற்கு வேறு சட்டம் என்பது கிடையாது. சட்டம் என்பது எல்லோருக்கும் ஒன்றுதான். சட்டரீதியாக எப்படி விசாரணை நடத்த வேண்டுமோ அப்படித்தான் நடத்த வேண்டும்.” என்றார்.

 

மேலும் அவர், “மாநிலத்தைப் பாதுகாப்பதற்காகத் தான் ஆளுநர் இருக்கிறார். அதைத் தாண்டி நாங்கள் பேசுவோம்; நாங்கள் சொல்லிக் கொடுத்தது; எழுதி வைத்ததைத்தான் ஆளுநர் படிக்க வேண்டும் என்பது தவறானது. சட்டசபையில் இருந்து ஆளுநர் வெளியேறும் போது அமைச்சர் பொன்முடியின் செயலை நாம் பார்த்தோம். ஆளுநருக்கு கொடுக்கப்பட வேண்டிய மரியாதை இதுதானா? இதைத்தான் திராவிட மாடல் என்று அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்களா?

 

இதற்கு முன்பு அமைச்சர் பொன்முடி இலவசமாக பெண்களுக்கு கொடுத்த பஸ் பயணத்தை 'உங்களுக்கு நாங்கள் ஓசியில் கொடுக்கவில்லையா' என்று கேட்டார். அப்பொழுது தமிழக முதல்வர் ஏதும் நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டார். இப்பொழுது ஆளுநர் வெளியே செல்லும் பொழுது 'போயா...' எனக் கையைக் காட்டிக்கொண்டே இருந்தார். இதுதான் அவர்களுடைய திராவிட மாடலா? மற்றவர்களை இழிவாகப் பேசுவது; அவமரியாதை செய்வதுதான் திராவிட மாடலா என்று நான் கேட்கிறேன்.'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜக ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திரம் கொண்டு வருவோம்'-நிர்மலா சீதாராமன் 

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேர்தலுக்கு முன்னதாகவே தேர்தல் பத்திரம் தொடர்பான கருத்துக்கள் மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவுகள் இத்தேர்தலில் மிகப்பெரும் பேசு பொருளாக இருந்தது. உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்ட  நிலையில் பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரத் திட்டம் என்பது அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், நன்கொடை வழங்கியோர், நன்கொடையைப் பெற்ற கட்சிகளின் விவரங்களை ஆணையத்திடம் வழங்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவோம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிப்போம். அனைவரும் ஏற்கத்தக்க வகையில் தேர்தல் பத்திரம் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வோம். தேர்தல் பத்திரம் வெளிப்படை தன்மையானது, கருப்பு பணத்தை ஒழிப்பதற்கானது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.