Advertisment

துரோகிகள் எங்கள் குடும்பத்தில்தான் இருக்கிறார்கள்... சசிகலா சகோதரர் பரபரப்பு பேட்டி!

ddd

"நான் என்றுமே வணங்கும் என் அக்கா ஜெயலலிதாவின் எண்ணத்துக்கு இணங்க,அவர் கூறியபடி இன்னும் நூறாண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சித் தொடர ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளான, ஜெயலலிதாவின் உண்மைத்தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்றிட வேண்டும்.

Advertisment

நம்முடைய பொது எதிரி தீயசக்தி என்று ஜெயலலிதா நமக்குக் காட்டிய, தி.மு.க.வை ஆட்சியில் அமரவிடாமல் தடுத்து விவேகமாக இருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட அவரின் தொண்டர்கள் பாடுபட வேண்டும்.

Advertisment

என் மீது அன்பும், அக்கறையும் காட்டிய ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்களுக்கும், நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, எப்படி அவர் எண்ணத்தைச் செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேனோ, அவர் மறைந்த பிறகும் அப்படித்தான் இருக்கிறேன்.

நான் என்றும் பதவிக்காகவோ, பட்டத்துக்காகவோ, அதிகாரத்துக்காகவோ ஆசைப்பட்டதில்லை. ஜெயலலிதாவின் அன்புத் தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்.

நான் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய, நான் என்றும் தெய்வமாக வணங்கி வரும் என் அக்கா ஜெயலலிதாவிடமும், எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்துகொண்டே இருப்பேன்" என சசிகலா 03.03.2021 அன்று அறிக்கை வெளியிட்டார். இது அதிமுக மற்றும் அமமுகவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

சசிகலா அறிக்கை குறித்து பல்வேறு விவாதங்கள் நடந்து வரும்நிலையில், "அரசியலை விட்டு சசிகலா விலகியதற்கு தினகரன்தான் காரணம்" என்று சசிகலா சகோதரர் திவாகரன் கூறியுள்ளார். இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது, "அரசியலைவிட்டு விலகுவதாக சசிகலா எடுத்தது நல்ல முடிவுதான்.

சசிகலாவிற்கு வயதாகிவிட்டது. உடல்நலப் பாதிப்பினால் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம். டிடிவி தினகரனின் நடவடிக்கைதான் அவர் அரசியலை விட்டு விலக காரணம். சசிகலாவுக்குத் துரோகிகள் வெளியில் இல்லை. எங்கள் குடும்பத்தில்தான் இருக்கிறார்கள்" எனக் கூறியுள்ளார்.

TTV Dhinakaran ammk admk sasikala
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe