Advertisment

நான் விளையாடி இருந்தால் இந்திய அணி வென்றிருக்கும்: சான்ஸ் வாங்கிக்கொடுங்க: ஜெயக்குமார்

அழகுமுத்து கோன் பிறந்தநாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Advertisment

jayakumar

இதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம், நேற்று இந்திய கிரிக்கெட் அணி தோல்வி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

Advertisment

அதற்கு பதில் அளித்த ஜெயக்குமார், ''நிச்சயமாக நான் விளையாடி இருந்தால் வெற்றி பெற்றிருக்கும். எனக்கு ஒரு சான்ஸ் வாங்கிக்கொடுங்களேன். அரசியலிலும், விளையாட்டிலும் வெற்றி தோல்வி என்பது சகஜம். இன்று தோல்வி நாளை வெற்றி. எப்படி எங்களுக்கு பாராளுமன்றத் தேர்தலில் தற்காலிக பின்னடைவு ஏற்பட்டதோ, அதைப்போலவே இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒரு தற்காலிக பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் காலத்தில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெறும். அதிமுக தமிழ்நாட்டில் என்றும் வெற்றி பெறும். ஓ.கே.'' எனக் கூறி விடைப்பெற்றார்.

team cricket jayakumar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe