ADVERTISEMENT
தென்சென்னை மக்களவைத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் குப்பல்ஜி. சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த இவர் வேட்பு மனு தாக்கலின்போது, சென்னை அடையாறில் உள்ள மாநகராட்சி 13-வது மண்டல அலுவலகத்திற்கு டெபாசிட் தொகையான ரூபாய் 25 ஆயிரத்தை சில்லரையாக கொண்டு வந்து அனைவரின் கவனத்தை ஈர்த்தவர். ஏப்ரல் 18ஆம் தேதி நடக்கும் தேர்தலில் இவருக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
இதையடுத்து அவர் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், தனது காரில் பானைகளை கட்டிக்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். பானைகளில் சகாதேவன், அர்ச்சுனன், தருமர், பீமன், நகுலன் ஆகியோரின் பெயர்களை எழுதி, அவர்களின் ஆசியோடு போட்டியிடுவதாக கூறியுள்ளார்.
Show comments