Skip to main content

சுயேச்சை மற்றும் தி.மு.க.வுக்கு பதவி கொடுத்த அமைச்சர்!!!

Published on 08/01/2020 | Edited on 08/01/2020

 

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை யூனியனுக்கு மொத்தம் 12 கவுன்சிலர்கள். இதில் அதிமுக 5 கவுன்சிலர்களும், திமுக 3 கவுன்சிலர்களும், சுயேச்சைகள் 4 கவுன்சிலர்களும் வெற்றி பெற்றனர். 

 

chairman post



முறைப்படி அதிமுக சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் தலைவர் பதவிக்கு வர வேண்டும். ஆனால் அங்கு யூனியன் சேர்மனாக அதிமுகவை சேர்ந்தவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றால் அது முன்னாள் அமைச்சரும் தொகுதி எம்எல்ஏவுமான தோப்பு வெங்கடாச்சலத்தின் ஆதரவாளர்கள்தான்.


 

 இதில் விருப்பமில்லாத மாவட்ட அமைச்சரான சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பவானி கருப்பண்ணன் தனது ஆதரவாளர்களிடம் பேசி எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் ஆதரவாளர்களாக வெற்றிபெற்றுள்ள அதிமுகவினர் யாரும் யூனியன் சேர்மனாக வரக்கூடாது, திமுகவிடம் பேசி சுயேட்சையை தலைவர் ஆக்கலாம் என முடிவுசெய்து அந்த யூனியனில் வெற்றிபெற்ற 4 சுயேச்சை உறுப்பினர்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததார். 


 

வெற்றி பெற்ற மேலும் 3 திமுக கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆக சுயேச்சை 4, திமுக 3  என மெஜாரிட்டி வந்தது. யூனியன் சேர்மன் பதவிக்கு ஏழு பேர் போதும். அதனடிப்படையில் சுயேச்சை ஒருவருக்கு யூனியன் சேர்மன் பதவியையும். திமுகவில் வெற்றி பெற்ற ஒருவருக்கு யூனியன் துணைச் சேர்மன் பதவியும் வைத்துக்கொள்வது என அமைச்சர் கருப்பணன் மூலம் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
 

இதனால் தொகுதி எம்எல்ஏவும் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் கட்சித் தலைமைக்கு அமைச்சர் கருப்பணன் அதிமுகவை தோற்க வைக்கிறார் என புகார் மனு கட்சி தலைமைக்கு அனுப்பி உள்ளார். ஒரு அமைச்சரே அதிமுக உறுப்பினர்கள் தலைவர் பதவிக்கு வராமல் தடுத்து சுயேச்சை ஒருவரை தலைவராக்கி திமுகவைச் சேர்ந்த ஒருவருக்கு துணைத்தலைவர் பதவி கொடுத்த வினோதமான செயல் ஈரோடு மாவட்டத்தில் ர.ர.க்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு வைகோ நேரில் அஞ்சலி (படங்கள்)

Published on 28/03/2024 | Edited on 28/03/2024

 

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது.

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மதிமுக சார்பில் வைகோ நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கணேசமூர்த்தியின் மகன் கபிலனுக்கு ஆறுதல் தெரிவித்தார்.