Skip to main content

மழைக்காலம் என்பதால் உள்ளாட்சி தேர்தலை டிசம்பர் மாதம் நடத்த வேண்டும்- பாஜக இல.கணேசன் பேட்டி

Published on 30/09/2019 | Edited on 30/09/2019

ஒரே நாடு,ஒரே மக்கள்,ஒரே சட்டம் மற்றும் அரசியல் அமைப்பு சட்டம் 370 நீக்கம் குறித்து மக்களை சந்தித்து தங்களது நிலைப்பாடு குறித்து விளக்க வேண்டும் என அகில இந்திய பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சியின் மாநில நிர்வாகிகள் சென்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் எனச்சொல்லப்பட்டது.

 

ila ganesan about article 370

 

 

அதன்படி செப்டம்பர் 29ந்தேதி மாலை திருவண்ணாமலையில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கலந்துகொண்டு சட்டப்பிரிவு 370 நீக்கம் குறித்து விளக்கி பேசினார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இல.கணேசன், அரசியல் அமைப்பு சட்டம் 370 நீக்கியதால் ஒட்டு மொத்த காஷ்மீர் மக்களும் அமைதியாகத்தான் உள்ளனர். 15 சதவீகித மக்கள் நேரடியாக எதிர்த்து செயல்படுகிறார்கள், விரைவில் அவர்களும் சகஜ நிலைக்கு வருவார்கள்.

காங்கிரஸ் இல்லாத பாரதம் அமைய வேண்டும் என்பது தான் பாரதிய ஜனதா கட்சியின் நோக்கம். அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் எங்கள் பணி உள்ளது. நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பாரதிய ஜனதா கட்சி  தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும். தமிழகத்தில்  வரும் உள்ளாட்சி தேர்தலுக்காக அதிமுகவுடன்  பேச்சுவார்த்தை நடத்தி, உள்ளாட்சி தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியும் பெரும்பாலான இடங்களில் போட்டியிடும். சென்ற நாடாளுமன்ற தேர்தலை விட உள்ளாட்சி தேர்தலில் மக்களின் ஆதரவு பாஜகவுக்கு அதிகமாக கிடைக்கும், வாக்கு சதவிகிதமும் அதிகரிக்கும். நவம்பர் மாதம் மழை காலம் என்பதால் உள்ளாட்சி தேர்தல் நவம்பர் மாதத்துக்கு பதில் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் வைத்தால் நன்றாக இருக்கும் எங்களது கருத்து என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.