Skip to main content

தேர்தலில் தோற்றால் நமக்கு சிக்கல் தான்... ஸ்டாலின் போட்ட ப்ளான்... டீல் பேசும் திமுகவினர்!

Published on 11/11/2019 | Edited on 11/11/2019

உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் வியூகம் எப்படி இருக்கிறது என்று அரசியல் வட்டாரங்களில் விசாரித்த போது,  மிகவும் கவனமாக தேர்தல் களத்தில் காலெடுத்து வைக்க வேண்டும் என்று  தி.மு.க. தலைமை நினைக்கிறது. வழக்கமாக சட்டமன்றத் தேர்தல் முடிந்து இரண்டு மூன்று மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடப்பது தான் வழக்கம். ஆனால் சட்டமன்றத் தேர்தல் வர இன்னும் ஒன்றரை ஆண்டுகாலம் இருக்கும் நிலையில், உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி அரசு இருப்பதால், அதிக கவனம் தேவை என்று தி.மு.க. தலைமை கருதுவதாக சொல்லபடுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் பெருவாரியான வெற்றியைக் குவிப்பது, சட்ட மன்றத் தேர்தலை எதிர்கொள்ள உதவும் என்று ஸ்டாலின் நினைப்பதாக கூறுகின்றனர்.

 

dmk



இதில் அ.தி.மு.க.வினரிடம் உள்ளாட்சிக் களத்தில் வெற்றியைப் பறிகொடுக்க நேர்ந்தால், அடுத்து சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்தாலும், நிர்வாகச் சிக்கல் தான் ஏற்படும் என்பதை தி.மு.க. நன்றாகவே உணர்ந்துள்ளது. அதே சமயம் கட்சிப் பிரமுகர்கள் பலரும் சட்டமன்றத் தேர்தலில் காட்டும்  வேகத்தை இடைத் தேர்தல் வரும் போதும் உள்ளாட்சித் தேர்தல் வரும் போதும் காட்டுவதில்லை என்ற  ஆதங்கமும் தி.மு.க. தலைமைக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது.  அதே போல் தி.மு.க. பிரமுகர்கள் பலரும் லோக்கலில் ஆளும் கட்சியினரோடு டை அப் செய்து கொண்டு  டெண்டர், கட்டிங் என்று காரியம் சாதிப்பதையும் தி.மு.க. தலைமை கவனித்து கொண்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

 

 

dmk



உதாரணமாக மாஜி மந்திரி பொன்முடி, லோக்கல் மந்திரி சி.வி.சண்முகத்தோடு நட்பு பாராட்டியதால், அவர் மகன் கௌதம சிகாமணி கள்ளக்குறிச்சி மக்களைவைத் தேர்தலில் வெற்றிபெற்றார். அதேபோல் கடந்த சட்டமன்றத் தேர்தலில் சி.வி.சண்முகம் விழுப்புரத்தில் நின்றபோது, அவருக்கு வசதியாக அங்கிருந்து விலகி பொன்முடி திருக்கோவிலூர் தொகுதியில் களமிறங்கி வெற்றிபெற்றார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பொன்முடியின் வேட்பாளரை வீழ்த்தினார் அதிமுக அமைச்சர் சண்முகம். இதேபோல்தான் கே.கே.எஸ்.எஸ்.ஆர், சாத்தூருக்கு இடைத்தேர்தல் வந்தபோது பெருசாக கவனம்  செலுத்தவில்லை என்று கூறுகின்றனர். அதனால் அங்கே அ.தி.மு.க. வெற்றிபெற்றது. இரு கழகங்களுக்குள்ளும் உட்கட்சியினர் அரசியல் தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

'மீண்டும் சிக்கிய 4 கோடி'-பறக்கும் படை அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
erode


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

மேலும், தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இரவு பகல் என சுழற்சி முறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் தொகையைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானி சாகர் என மாவட்டம் முழுவதும் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரைத் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4 கோடியே 28 லட்சத்து 20 ஆயிரத்து 303 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் காண்பித்ததால் ரூ.2 கோடியே 95 லட்சத்து 65 ஆயிரத்து 213 சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் 1 கோடியே 32 லட்சத்து 55 ஆயிரத்து 90 ரூபாய் பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பாஜகவின் நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அது தொடர்பாக அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.