Skip to main content

“இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்தால், ஜனநாயகத்திற்கே ஆபத்தாக முடியும்” - கமல்ஹாசன் பேட்டி

Published on 20/04/2021 | Edited on 20/04/2021

 

If such incidents continue, democracy itself can be endangered Kamal Haasan interview

 

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது கவனத்திற்கு வந்த சில பிரச்சினைகள், வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பில் நீடிக்கும் மர்மங்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை ஆகியவை தொடர்பான மனுவை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்களை நேரில் சந்தித்துக் கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன் பேசியதாவது, “ஸ்ட்ராங் ரூம் என்பது உண்மையான ஸ்ட்ராங் ரூமாக இருக்க வேண்டும்.

 

சிசிடிவி கேமராக்கள் அவ்வப்போது செயலிழப்பதும், மர்ம கண்டெய்னர் வளாகத்தில் நுழைவதும், திடீர் தீடீரென வைஃபை வசதிகள் வளாகத்தின் உள்ளும், வெளியூம் உருவாகுவதும், லேப்டாப்புடன் மர்ம நபர்கள் நடமாடுவதும், மின்சராத் தடை ஏற்படுவதும் பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும் விதிமுறைகள் கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும். தேர்தல் முறையாக நடத்தப்பட்டு, முடிவுகள் சரியாக அறிவிக்கப்படுகின்றன என்ற நம்பிக்கையை மக்களிடத்திலும், வேட்பாளர்கள், அரசியல்வாதிகளின் மத்தியிலும் உருவாக்குவதும் தேர்தல் ஆணையத்தின் கடமை.

 

ஏற்கனவே 30 சதவீத வாக்காளர்கள் ஜனநாயக கடமையை ஆற்றுவதில்லை. அதேபோல் வாக்குப்பதிவிலும், வாக்கு இயந்திரத்திலும் இன்னும் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழ்ந்தால், வாக்கு சதவீதம் குறையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அது ஜனநாயகத்திற்கே ஆபத்தாக முடியும். வாக்காளர் பட்டியல் குளறுபடிகளையும் புகாராக அளித்திருக்கிறோம். இது முதல் கட்டம் மட்டுமே. இன்னும் அதிக புகார்கள் இருக்கின்றன, மற்றும் வந்த வண்ணம் உள்ளன. அதையும் திரட்டி உங்கள் முன் கொண்டு வருவோம். இது ஜனநாயகத்தைக் காப்பாற்ற எடுக்கப்பட்ட முயற்சி; எங்களைக் காப்பாற்ற எடுக்கப்பட்ட முயற்சிகள் அல்ல.

 

மேலும், தேர்தல் ஆணையம் வாக்கு இயந்திரத்தைக் கையாளுவதிலும், பாதுகாப்பதிலும் தவறு உள்ளது என்பதுதான் எங்களின் புகார். அதைப் புகாராக கூற விரும்பவில்லை, அதனால் பரிந்துரைகளாக கொடுத்திருக்கிறோம். மொத்தம் 75 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ள நிலையில், இந்தப் புகார் அனைத்து இடங்களுக்கும் பொருந்துமா என்றால், விருந்தில் உண்ண தகாத ஒன்றை எந்த ஓரத்தில் வைத்தாலும் தவறு. அது போன்றுதான் இதுவும். அதனால் அது வாழை இலையிலே வரக்கூடாது” என்றார்  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பேராசான் பிறந்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்” - கமல்ஹாசன்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kamalhassan mnm campaign begins with erode

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தமாக ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க-வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

இந்த நிலையில் முதற்கட்டமாக ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.