ரஜினி ஆட்சிக்கு வந்தால் நீட் முதல் நியூட்ரினோ வரை அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்- தமிழருவி மணியன்

rajini tamilaruvi manian

காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் ஓசூரில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர்,

கர்நாடகாவில் எலியும், பூனையுமாக இருந்த சித்தராமையாவும், குமாரசாமியும் இன்று ஒருவருக்கொருவர் நட்பு கொண்டு நடிப்பது, பதவிக்காகத்தான். இவர்கள் நடத்துவது பதவிக்கான அரசியல், இதில் மக்கள் நலன் ஒன்றுமில்லை.

10 நாட்களுக்கு ஒரு முறை ரஜினியை நான் நேரில் சந்தித்து பேசி வருகிறேன். மற்ற நேரங்களில் போன் மூலம் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வருகிறோம். ரஜினி எனது சகோதரர். அவரை நான் கைவிட்டாலும், தமிழ்நாடு கை விடாது, தமிழக மக்கள், கோட்டையில் முதல்வர் பதவியில் ரஜினியை அமர்த்துவதற்கு தயாராகி விட்டனர். எல்லோர் மனதிலும் அவர் மட்டும் தான் இடம் பிடித்துள்ளார். ரஜினி ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வு முதல் நியூட்ரினோ வரை அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும். இவ்வாறு கூறினார்.

cm neet exam rajini tamilaruvi manian
இதையும் படியுங்கள்
Subscribe