மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டில் டிடிவி தினகரன் அணி சார்பில் நேற்று இரவு நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளரான தங்கதமிழ்செல்வன் பேசியதாவது,
அம்மா திட்டமான ஸ்கூட்டர் திட்டத்தை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வந்தார். இவ்விழாவில் பிரதமர் மோடி பேசும் போது கூட தமிழில் பேசினார். ஆனால் இந்த ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் ஆங்கிலத்தில் பேசினார்கள். அதுபோல் அம்மா என நான்கு முறை சொன்னார்களே தவிர மோடி என 32 தடவை சொன்னார்கள்.. இதுவா அம்மாவுக்கு காட்டுகிற விசுவாசம்? அம்மா மூலம் ஆட்சியில் உட்காந்து கொண்டு அம்மாவுக்கு விசுவாசமாக இல்லாமல் மோடிக்கு துதிபாடி வருகிறீர்களே வெட்கமாக இல்லை?. இந்த ஸ்கூட்டர் திட்டம் மூலம் 50ஆயிரம் பேர் தான் பயன் அடைவார்கள் ஆனால் அம்மா ஏற்கனவே அறிவித்து இருந்த செல்போன் திட்டத்தை செயல்படுத்தி இருந்தால் 2கோடி மக்கள் பயனடைந்து இருப்பார்கள்.
இதை எல்லாம் சொல்ல போனால் நாம குற்றவாளி என்கிறார்கள். ஏழு தனிப்படை அமைத்து தேடுகிறோம் என்கிறார்கள். இதோ உங்க முன்னாடி தான் பேசி கொண்டு இருக்கிறேன் ’தைரியம் இருந்தா என்னை கைது பண்ணி பாருங்க என்ன விபரீதம் நடக்கும் என்பது உங்களுக்கு தெரியும்’ அதுனால தான் எங்களை கைது பண்ண வில்லை. ஓபிஎஸ் நூற்றாண்டு விழாவில் பேசும் போது எல்லாம் அதிமுக எஃகு கோட்டை அதையாரும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது என்கிறார் ஆனால் ஏற்கனவே அந்த கோட்டையில் 32 செங்களை உருவி இருக்கிறோம் ஒரு செங்கள் எடுத்தாலே கட்டிடம் தாங்காது அப்படி இருக்கும் போது 32 செங்களை உருவி இருக்கிறோம் என்றால் எப்ப வேண்டுமானலும் கட்டிடம் விழுகும்.
18 எம்.எல்.ஏக்களின் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக இருக்கும் அதன் மூலம் நாங்க சட்டமன்றத்திற்குள் நுழைந்தால் உங்களுக்கு பதில் சொல்ல தெரியாது. அதுபோல் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக இல்லை என்றால் தேர்தல் நடத்து.. அதில் நாங்க 18 பேரும் அண்ணன் டிடிவி தினகரன் ஆசியோடு வெற்றி பெறுவோம். அப்படி நாங்க வெற்றி பெறவில்லை என்றால் அரசியலை விட்டே ஒதுங்கி கொள்கிறோம். மக்கள் எங்க பக்கம்தான் இருக்கிறார்கள் அதுனால எப்ப தேர்தல் வந்தாலும் அமோகமாக வெற்றி பெற்று அதன் மூலம் அண்ணன் டிடிவியை முதல்வராக கொண்டுவருவோம் என்று கூறினார்.
தைரியம் இருந்தா என்னை கைது பண்ணி பாருங்க..! தங்கதமிழ்செல்வன் சவால்..!
சார்ந்த செய்திகள்
Next Story
'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்
தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.
இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.
ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.
Next Story
தர்மத்துப்பட்டியில் டி.டி.விக்கு வந்த சோதனை
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.
அதன்படி பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரமாக செய்து வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள், அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தேனியில் உள்ள தர்மத்துப்பட்டியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த டி.டி.வி.தினகரன் பரப்புரையை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது செல்லும் வழியில் வாகனத்தை நிறுத்திய பறக்கும் படை அதிகாரிகள் அவரது வாகனத்தை சோதனை செய்தனர்.