Skip to main content

“ஏனோதானோ என்று இருக்கமாட்டேன்; சீரியஸானால் உச்சநீதிமன்றத்தை நாடுவோம்” - அமைச்சர் துரைமுருகன்

Published on 04/08/2023 | Edited on 04/08/2023

 

 "I won't be anything else; if we are serious, we will approach the Supreme Court" - Minister Duraimurugan interview

 

'மேகதாது அணை கட்டுவதாக அவர்கள் எடுக்கின்ற நடவடிக்கைகள் சீரியஸ் ஆகுமானால் உச்சநீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்படும்' எனத் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

 

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “சர்வே பண்ணுவதிலேயே மேகதாது அணையை கட்டிவிட முடியாது. எந்த ஒரு அணையைக் கட்டுவதாக இருந்தாலும் டிபிஆர் தயார் செய்ய வேண்டும். அந்த டிபிஆர்-ஐ சென்ட்ரல் வாட்டர் கமிஷன் ஒத்துக்கணும். அவர்கள் ஒத்துக் கொள்வதை பொல்யூஷன் போர்டு ஒத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு ஃபாரஸ்ட் டிபார்ட்மென்ட் ஒத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு காவேரி வாட்டர் மேனேஜ்மென்ட் அத்தாரிட்டி ஒத்துக்க வேண்டும். எவ்வளவு வேலைகள் இருக்கிறது. ஆகையால் அணை கட்டும் வேலையெல்லாம் நடக்காது. இந்த ஸ்கூல் பசங்களுக்கு புது புக் வாங்கி கொடுத்தீங்கன்னா அதை ஆர்வத்துடன் திறந்து பார்ப்பார்கள். அது போன்ற வேகத்தில் இருக்கிறார்கள். இதெல்லாம் ஒரு பரபரப்பான செய்தியே தவிர இதனாலேயே அணைக்கட்டி விட முடியாது. அதற்காக ஏனோதானோ என்று இருக்கமாட்டேன். அவர்கள் எடுக்கின்ற நடவடிக்கைகள் சீரியஸ் ஆகுமானால் உச்சநீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்படும்'' என்றார்.

 

அப்பொழுது செய்தியாளர்கள், '11-ம் தேதி நடைபெற இருக்கும் காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசின் இந்த நிலைப்பாட்டை எடுத்துச் சொல்வீர்களா?' என்ற கேள்விக்கு, “கண்டிப்பாக சொல்வேன். என்னுடைய தொகுதியில் கடந்த இரண்டு ஆண்டு காலமாக பஞ்சாயத்து தோறும் பணிகள் எப்படி நடந்திருக்கிறது. எந்தெந்த பணிகள் இன்னும் நிலுவையில் இருக்கிறது என்பதை எல்லாம் ஓர் ஆய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையின் காரணமாக மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அதிகாரிகளோடு பஞ்சாயத்து தலைவர்கள், கவுன்சிலர்களை வைத்துக் கொண்டு ஒவ்வொரு பஞ்சாயத்தாக ஒரு ஆய்வு நடத்தினோம். இதில் சில பணிகள் தொய்வில் இருக்கிறது. அவற்றை விரைவில் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறோம். சில பஞ்சாயத்துகளுக்கு தேவையான முக்கியமான சில திட்டங்களை சொல்லியிருக்கிறார்கள். அந்த திட்டங்களை எல்லாம் அடுத்து வரும் ஆண்டில் செய்ய இருக்கிறோம்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ஜ.கவை காலி சொம்புடன் ஒப்பிட்டு கிண்டல் அடித்த ராகுல் காந்தி!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Rahul Gandhi taunted by comparing BJP's poetry with empty anvil!

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 88 தொகுதிகள் தேர்தல் நடைபெற்றது. 

கர்நாடகா மாநிலத்தில் நடந்து முடிந்த வாக்குப்பதிவுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய ராகுல் காந்தி, “இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஒரு கட்சி, அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் அழிக்க விரும்புவதால், முன்பு நடந்த தேர்தல் போல் இந்த தேர்தல் அல்ல. பிரதமரின் உரைகளைக் கேட்டிருப்பீர்கள். அவர் பயந்துவிட்டார். அவர் மேடையில் கண்ணீர் விடக்கூடும். சில சமயங்களில் சீனா, பாகிஸ்தானைப் பற்றிப் பேசுவார். சில சமயம் தட்டுகளை அடிக்க வைத்து, உங்கள் மொபைல் போன்களின் டார்ச் லைட்டை ஆன் செய்யச் சொல்வார். பா.ஜ.க என்ன செய்யப்போகிறது என்பதை நான் சொல்கிறேன். நரேந்திர மோடியின் பாரதிய சொம்பு கட்சி காலியாக உள்ளது.

அது கர்நாடகா மாநிலம், நாட்டிற்கு ஜி.எஸ்.டியாக வழங்கும் ஒவ்வொரு ரூ.100க்கும், அதற்கு ஈடாக ரூ.13 மட்டுமே வரிப் பகிர்வின் கீழ் கிடைக்கிறது. வறட்சி நிவாரணமாக கர்நாடகாவுக்கு சுமார் ரூ.18,000 கோடி கிடைக்க வேண்டும், ஆனால் அதற்கு ‘சொம்பு’ தான் கிடைத்தது” எனத் தெரிவித்தார்.

பா.ஜ.கவை காலி சொம்புடன் ஒப்பிட்டு பேசிய ராகுல் காந்தி, தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்திலும் இதே போன்ற பதிவை ஒன்றை அளித்துள்ளார். அந்த பதிவில், ‘பொதுமக்களின் பணத்தை ஏராளமாகக் கொள்ளையடித்து, பதிலுக்கு காலி பானை வழங்கப்பட்டது. இது மோடியின் பாரதிய சொம்பு கட்சி’ எனப் பதிவிட்டு சொம்புடன் இருந்தபடி இருந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.