Skip to main content

“முதலமைச்சருக்கு நான் ஹிந்தி கற்றுத் தருகிறேன்” - குஷ்பூ

Published on 10/03/2023 | Edited on 10/03/2023

 

“I will teach Hindi to the Chief Minister” – Khushboo

 

எனக்கு நன்றாக ஹிந்தி எழுத படிக்க தெரியும் என்றும் முதலமைச்சருக்கு நான் ஹிந்தி கற்றுத் தருகிறேன் என்றும் குஷ்பூ கூறியுள்ளார்.

 

திருப்பூரில் வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வெளியான தகவல்கள் தொடர்பான விவகாரத்தில் வதந்தி பரப்பியவர் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது, சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவது உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

 

இந்நிலையில் அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதை கண்டித்து தமிழக பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், தேசிய மகளிர் ஆணைய சிறப்பு உறுப்பினர் குஷ்பூ மற்றும் பாஜக மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பேசிய குஷ்பூ, “பிரதமர் மோடி ஒவ்வொரு முறையும் பேசும் பொழுது தமிழ் மொழி, தமிழ் மக்கள், தமிழ் மண் என மிகப் பெருமையாக பேசுகிறார். ஆனால் திமுகவினர் ஹிந்தி திணிப்பு என்று மக்களை திசை திருப்புகிறார்கள். கர்நாடகத்தில் ஹிந்தி கற்றவர்கள் 65 ஆயிரம் பேர், கேரளாவில் 21 ஆயிரம் பேர், தமிழகத்தில் ஹிந்தி கற்க விண்ணப்பித்தவர்கள் 2 லட்சத்து 31 ஆயிரம் பேர். 

 

முதலமைச்சர் பிரதமராக வேண்டும் என ஆசைப்படுகிறார். டெல்லிக்கு சென்றால் ஹிந்தி கற்றுக்கொள்ள மாட்டாரா? சொல்ல முடியாது முதலமைச்சர் இப்பொழுதே ஹிந்தி கற்றுக்கொள்ள ஆரம்பித்திருப்பார். தனிப்பட்ட முறையில் இப்பொழுதே ஹிந்தி கற்றுக்கொள்ள ஆரம்பித்து இருப்பார். தெரியாது என்றால் சொல்லுங்கள் எனக்கு நன்றாக ஹிந்தி எழுத படிக்க தெரியும் உங்களுக்கு நான் கற்றுத் தருகிறேன். இந்தியாவில் ஊழல் இல்லாத ஆட்சி என்றால் அது பாஜக ஆட்சி என்று சொல்லும் மாதிரிதான் உள்ளது. உலகம் முழுவதும் ஆற்றல் மிக்கத் தலைவர் யார் என்று கேட்டால் அது மோடி தான். இது தமிழ் மண். இந்த மண்ணை காப்பாற்ற வேண்டியது எங்கள் பொறுப்பு. உங்களால் முடியவில்லையா நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்லும் தைரியம் பாஜகவிற்கு உள்ளது.” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.