Skip to main content

காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவேன்; உறுதியளிக்கும் துரை வைகோ!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
I will execute the Cauvery Linkage Project; Assured Durai Vaiko!

திருச்சி தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் துரை.வைகோவை ஆதரித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு புதுக்கோட்டை தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது “புதுக்கோட்டை மாநகராட்சியாக தரம் உயர்ந்துள்ளது. புதுக்கோட்டையில் தண்ணீர் பிரச்சனை உள்ளது. தண்ணீர் பிரச்சனையை போக்க லாரியில் தற்போது குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ரூ.100 கோடி செலவில் பழைய பைப் லைன் மாற்றப்படுகிறது. மாவட்டம் முழுவதும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க ரூ.2,600 கோடி பணிக்கான திட்டத்தில், ரூ.1,550 கோடியில் பணிகள் டெண்டர் விடப்பட்டு திட்டம் தொடங்கப்பட உள்ளது. புதுக்கோட்டை மன்னர் நகரமாக இருப்பதால் மாநகராட்சியாக தரம் உயர்த்தியுள்ளோம்”. 

“மாநகராட்சியாக தரம் உயர்ந்துள்ளதால் வேலை வாய்ப்பு கிடைக்கும், குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படும். அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு திருச்சிக்கு இணையாக புதுக்கோட்டை மாற்றப்படும். புதுக்கோட்டை மாநகராட்சிக்கான பணிகளை நாங்கள் கொண்டு வரும் போது துரை வைகோ துணையாக, உறுதியாக இருப்பார்கள். மத்திய அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய நிதியை அவர் பெற்று தருவார். மக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என உறதியளிக்கிறேன். கடந்த தேர்தலில் திருநாவுக்கரசர் வெற்றி பெற்ற வாக்குகளை விட துரை வைகோ அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார். அவரை பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டியது நமது கடமை” என்றார். 

கூட்டத்தில் துரை வைகோ பேசுகையில் “புதுக்கோட்டை நகரில் 2 ரெயில்வே கேட்களில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நீண்ட கால கோரிக்கையான காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற உறுதியாக இருப்பேன். மக்கள் எளிதில் அணுகும் வகையில் இருப்பேன். எனக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற வையுங்கள்” என்றார்.

முன்னதாக தேர்தல் அலுவலகத்தை அமைச்சர் கே.என். நேரு திறந்து வைத்தார். ஆதனக்கோட்டை கடைவீதி, ஆகிய இடங்களில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.  அப்போது வேட்பாளர் துரை வைகோ உடன் இருந்தார். கூட்டத்தில் மாவட்ட மதிமுக செயலாளர் கலியமூர்த்தி, முத்துராஜா எம்.எல்.ஏ, மாவட்ட பொருளாளர் லியாகத் அலி, புதுக்கோட்டை நகரச் செயலாளர் செந்தில், முன்னாள் எம்.எல்.ஏ அரசு, மாவட்ட துணைச் செயலாளர் மதியழகன், ஒன்றிய செயலாளர் சண்முகம் மற்றும் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உட்பட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

மக்களவைத் தேர்தல்; 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Lok Sabha elections 2nd Phase voting has started

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதனையடுத்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதாவது கர்நாடகா, ராஜஸ்தான், அசாம், பீகார், கேரளா மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

அதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள உள்ள 42 தொகுதிகளில் 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார் மாநிலங்களில் தலா 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளாவில் உள்ள 20 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. அதே போன்று மகாராஷ்டிராவில் 8 தொகுதிகளுக்கும், மத்திய பிரதேசத்தில் 6 தொகுதிகளுக்கும், ஜம்மு - காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் என வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.