Skip to main content

“எம்.ஜி.ஆரால் அடையாளம் காட்டப்பட்டவன் நான்” இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் திருநாவுக்கரசர்

Published on 17/04/2019 | Edited on 17/04/2019

17-வது மக்களவை தேர்தல் 18-ம் தேதி நடக்க உள்ள நிலையில் இறுதிக்கட்ட பிரச்சாரம் சூடு பறந்தது. ஒவ்வொரு வேட்பாளரும் ஒரு ஊரில் தங்கள் பிரச்சாரத்தை முடித்தார்கள். அந்தவகையில் திருச்சி தொகுதி தி.மு.க காங்கிரஸ்  கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திருநாவுக்கரசர் புதுக்கோட்டையில் தனது இறுதிப் பிரச்சாரத்தை முடித்தார். அதன்பிறகு, அண்ணா சிலை அருகே தனது இறுதி பிரச்சாரத்தின்போது அவர், “கடந்த 20 நாட்களாக  கூட்டணி கட்சியினர் ஒவ்வொருவரும் வேட்பாளராகக் கருதி சங்கடமின்றி, மனப்பூர்வமாக பணியாற்றினார்கள். அதுமட்டுமின்றி வாக்குப் பதிவு முடிந்து, வாக்குப்பெட்டியை அனுப்பி வைக்கும் போதும், மே 23-ம் தேதி நாம் வெற்றி பெற்றோம் என்று அறிவிக்கும் வரையிலும் செயல்படும் கூட்டணி கட்சியை சேர்ந்த அத்தனை பேருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

 

thirunavukarasar


இத்தனை ஆண்டுகள் என்னை தாய்போல் மடியில் வைத்து தாங்கியவர்கள் புதுக்கோட்டை மக்கள்.  பதவியில் இருந்தபோதும், இல்லாதபோதும் கட்சி எல்லையைக் கடந்து சாதி, மதங்களைக் கடந்து உங்களையே சுற்றி சுற்றி வந்திருக்கிறேன். திருச்சி தொகுதியில் போட்டியிடுவோரில் 1977-ம் ஆண்டு நான் திருமணம் ஆகாத 27 வயது இளைஞராக இருந்தபோது எம்ஜிஆரால் அடையாளம்  காணப்பட்டு துணை சபாநாயகர் பதவியும் வகித்தவன். அதுவரை அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் கோட்டை. ஆனால் அதில் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். அந்த ஒரே தொகுதியில் 6 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வானேன். அதற்கு பிறகு 1999-ல் புதுக்கோட்டை பாராளுமன்றத் தொகுதியில் கலைஞர் துணையால் மோதிரம் சின்னத்தில் நிறுத்தி வெற்றி பெற்ற நான், பிறகு ராஜசபாவிலும் எம்.பியாக பணியாற்றி அமைச்சராக இருந்தவன். அகில இந்திய தலைவர்களோடு பழகிய நான் போட்டியிடுகிறேன். 

     
மற்றொரு பக்கம் தர்மபுரியில் இருந்து வந்து போட்டியிடும் தேமுதிக வேட்பாளர். வெற்றி பெற்றால் என்ன சாதிக்கப்போகிறார்?. அவர் மத்தியில் அமைச்சராகப்போகிறாரா? அல்லது விஜயகாந்த் பிரதமராகபோகிறாரா?. எதுவும் நடக்கப்போவதில்லை. ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் தே.மு.தி.க.வை கூட்டணிக்கு அழைத்திருக்கவே மாட்டார். ஆனால், ஒ.பி.எஸ். ஈ.பி.எஸ். கூட்டணி அமைத்திருக்கிறார்கள்.
 

    
இந்த தொகுதியில் இரட்டை இலையும் நிற்கவில்லை, அ.தி.மு.க வும் இல்லை. அதனால்தான் சொல்கிறேன். எம்.ஜி.ஆரால் அடையாளங்காட்டப்பட்ட எனக்கு வாக்களித்த வெற்றி பெறச் செய்யுங்கள். புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை இணைந்து மலைக்கோட்டை தொகுதியில் நிற்கும் என்னை உங்கள் இதய கோட்டையில் வைத்து செங்கோட்டைக்கு அனுப்பினால் ஸ்டாலினை புனித சார்ஜ் கோட்டைக்கும் ராகுலை செங்கோட்டைக்கும் தலைமை ஏற்க வைக்க முடியும். அதனால் உங்கள் இதய கோட்டையில் எனக்கு இடம் கொடுங்கள்.

      
அமமுக ஒரு அரசியல் கட்சியே இல்லை. அந்தக் கட்சியினர் திருச்சி தொகுதியில் மட்டுமின்றி தமிழகத்தில் எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறப்போவதில்லை. நான் இத்தனை ஆண்டுகளில் நல்லது செய்திருப்பேனே தவிர, எவருக்கும் துரோகம் செய்ததில்லை. எனவே, என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்.

   
புதுக்கோட்டை மக்களின் நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். மேலும், புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி இல்லாமல் போனது வருத்தத்துக்கு உரியது. தொகுதி மறு சீரமைப்பின்போது மீண்டும் புதுக்கோட்டை தொகுதி உருவாக்கப்படும்” என்றார்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.

Next Story

“தேர்தலை புறக்கணியுங்கள்..” - மக்களுக்கு பகிரங்க மிரட்டல்; கேரளாவில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 threat to public to boycott election in Wayanad

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம்  இன்று (24-04-24) மாலையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கம்பமலை கிராமத்திற்கு வந்த ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் 4 பேர் பொதுமக்களிடையே தேர்தலை புறக்கணியுங்கள் என்று எச்சரித்துள்ளனர். மேலும் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜவும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.