Skip to main content

“20 ஆயிரம் முதியோர்களுக்கு நிவாரண உதவித்தொகையை நிறுத்திய இந்த அரசுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்” - ஐ.பெரியசாமி

Published on 30/12/2020 | Edited on 30/12/2020

 

I. Periyasamy  says "Teach a lesson to this government which has stopped the relief allowance for 20 thousand elderly people"


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் மேற்கு ஒன்றியம் தி.மு.க. சார்பாக போடிகாமன்வாடி ஊராட்சிக்கு உட்பட்ட சொக்கலிங்கபுரத்தில் ‘அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம்’ மக்கள் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ராமன் தலைமை தாங்கினார்.
 


இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட  ஆத்தூர் சட்டமன்ற  உறுப்பினர் ஐ.பெரியசாமி, “பத்து  வருடங்களுக்கு முன்பு தி.மு.க. ஆட்சியின்போது விவசாய கடன்களை தள்ளுபடி செய்தோம். எரிவாயுவுடன் கூடிய அடுப்பு கடன்களை தள்ளுபடி செய்தோம். சுய உதவிக்குழு பெண்களுக்கு கடன் உதவிகளை வழங்கினோம். ஆனால், இப்போது மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசும், தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. அரசும் பொதுமக்களின் நலனில் அக்கறை கொள்ளாமல் மாதந்தோறும் எரிவாயு விலை உயர்வு, மின்கட்டண உயர்வு, போக்குவரத்துக் கட்டண உயர்வு என படிப்படியாய் ஏற்றிக் கொண்டே வருகிறது. 

 

I. Periyasamy  says "Teach a lesson to this government which has stopped the relief allowance for 20 thousand elderly people"

 

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தத் தவறிய இவர்களுக்கு பொதுமக்கள் மத்தியில் தி.மு.க.வை பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது.  இந்த ஆத்தூர் தொகுதியில் மட்டும் 20 ஆயிரம் முதியோர்களுக்கு தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்டு வந்த நிவாரண உதவித்தொகையை நிறுத்திய இவர்களுக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் பொதுமக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். 

 


தமிழக அரசும் ஆத்தூர் தொகுதியில் கடந்த 10 வருடங்களாக எந்த ஒரு நலத்திட்டத்தையும் முறையாக செயல்படுத்த அனுமதி கொடுப்பதில்லை. உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிகாரிகளுக்கு 17 சதவீதம் லஞ்சம் வாங்கிக் கொடுக்கச் சொல்லி திட்ட அலுவலக அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர். இதற்காகவா அவர்களை பொதுமக்கள் தேர்ந்தெடுத்தார்கள். மக்கள் நலனுக்கான பணிகள் எதுவும் முறையாக செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. 

 

தொகுதி மக்களின் நலன் கருதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.20 கோடியில் ரூ.19 கோடியை 46 கிராம ஊராட்சிகள், 5 பேரூராட் சிகளுக்கு செலவழித்துள்ளேன். இதன் மூலம் தொகுதியில் குடி தண்ணீர் பிரச்சனை ஓரளவு தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. 120 நாட்களுக்குள் சீவல் சரகு ஊராட்சியில் உள்ள சமத்துவபுரம் சீரமைக்கப்பட்டு அழகிய நகரமாக மாற்றப்படும்” என்று கூறினார்.

 


இந்த நிகழ்ச்சியில் ரெட்டியார்சத்திரம் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்டத் துணைச் செயலாளர் தண்டபாணி, மாவட்டத் தொண்டரணி துணை அமைப்பாளர் கும்மம்பட்டி விவேகானந்தன் உள்பட கட்சி பொருப்பாளர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.