Skip to main content

''முதல்வரும் நானும் பலமுறை பேசிவிட்டோம்; நல்ல முடிவு வரும்''-பாமக ராமதாஸ் பேட்டி

Published on 16/07/2023 | Edited on 16/07/2023

 

''I have spoken to the chief five or six times; A good result will come'' - Pamaka Ramadoss interview

 

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன் வைத்தனர். அதில் 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு குறித்த கேள்விக்கு பதிலளித்த ராமதாஸ், 'அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. நாங்களும் அரசும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். அதற்கான தரவுகளை அரசு சேகரித்துக் கொண்டிருக்கிறது. எங்களை அடிக்கடி கூப்பிட்டு அது சம்பந்தமாக அரசு பேசுகிறது. முதலமைச்சரோடு இதுவரை நான்கு ஐந்து முறை தொலைபேசியில் பேசி இருக்கிறேன்.10.5 சம்மந்தமாக விரைவில் அரசு நல்ல முடிவு எடுக்கும் என்று நம்புகிறோம்.

 

என்னுடைய பாட்டாளி சொந்தங்களுக்கு அறிவுரை சொல்லத் தேவையில்லை. ஏனென்றால் அவர்கள் மற்றவர்களுக்கு அறிவுரை சொல்கின்ற அளவிற்கு அவர்களுக்கு வேண்டிய பயிற்சிகளை அரசியல் பயிலரங்கம் தொடர்ந்து கொடுத்து வருகிறது என்பதனால் அவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள், எல்லாம் அறிந்தவர்கள். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களும் நன்றாக வளமாக வாழ வேண்டும். அவர்களுடைய குழந்தைகளுக்கு நல்ல கல்வியை, உயர்ந்த கல்வியைத் தர வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்.

 

இன்னொரு விருப்பம் புகையில்லாத, மது இல்லாத தமிழகம். புகையிலை எந்த வடிவத்திலும் எந்த ரூபத்திலும் மக்களிடம் வரக்கூடாது. அது சிகரெட்டாகவோ அல்லது புகையிலையாகவோ அல்லது பொடியாகவோ வரக்கூடாது. வந்தால் தடை செய்வதற்கான எல்லா முயற்சிகளையும் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி எடுத்து வருகிறது. நான் அடிக்கடி சொல்வதுண்டு மும்மூர்த்திகள் கடவுள்கள் வந்து என்னிடம் எதிரில் வந்து உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டால், நான் இரண்டு வரத்தை எனக்கு கொடுங்கள் என்று கேட்பேன். முதல் வரம் மது இல்லாத தமிழகம். இன்னொன்று ஒரு சொட்டு மழை நீர் கடலில் போய் கலக்கக்கூடாது. இந்த இரண்டும் மட்டும் போதும்  என்று சொல்வேன். இந்த இரண்டு வரத்தை தான் கேட்பேன்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.