Skip to main content

எனது அறிவை இளைஞர்களுக்கு கொடுக்கவே அரசியலுக்கு வந்தேன் - ரா.அர்ஜுனமூர்த்தி 

Published on 22/08/2022 | Edited on 22/08/2022

 

ra.arjunamurthy

 

இந்திய மக்கள் முன்னேற்ற கட்சியின் தலைவர் ரா. அர்ஜுனமூர்த்தி தற்போது மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார். 

 

தமிழக பாஜக கட்சியில் அறிவு சார் பிரிவின் மாநில தலைவராக செயல் பட்டவர் ரா.அர்ஜுனமூர்த்தி. பாஜகவில் இருந்த அர்ஜுனமூர்த்தி ரஜினிகாந்த் கட்சி தொடங்க உள்ளார் என்ற பேச்சுவார்த்தை தொடர்ந்த நிலையில் பாஜகவில் இருந்து பிரிந்து ரஜினியுடன் இணைந்தார். ஆனால் கட்சி தொடங்காமல் ரஜினிகாந்த் பின் வாங்கிய நிலையில் இந்திய மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தனிக் கட்சி தொடங்கினார். இதற்கிடையே இன்று  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் மீண்டும் பாஜகவுடன் இணைந்தார். 

 

அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை "அர்ஜுனமூர்த்தி இன்று பாஜகவுடன் தன்னை இணைத்துக்கொள்கிறார். இதற்கு முன் பாஜகவில் பயணம் செய்தவர். கட்சியின் அறிவுசார் பிரிவில் மாநில தலைவராக இருந்தவர். பாரதிய ஜனதாவின் கொள்கையை ஏற்றுக்கொண்டு யார் வந்தாலும் அவர்களுக்கு முழு அனுமதி இருக்கிறது. குறுகிய மனப்பான்மை எப்பொழுதும் பாரதிய ஜனதாவுக்கு கிடையாது. நம்முடைய சித்தாந்தம் மற்றும் என்ன அரசியலில் யார் இருந்தாலும் அவர்கள் பாரதிய ஜனதாவுடன் இணைந்து பயணிக்க  பாஜக எப்பொழுதும் விரும்பும். அர்ஜுனமூர்த்தி பாரதிய ஜனதாவில் இருந்து பிரிந்து சென்றாலும் மீண்டும் நம்முடன் இணைய வந்திருக்கிறார். அவரை மகிழ்ச்சியுடன் பாரதிய ஜனதா வரவேற்கிறது" என கூறினார் .

 

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அர்ஜுனமூர்த்தி "பாரதிய ஜனதா கட்சியில் பதவிக்காக சேரவில்லை. இளைஞர்களுக்கு   நமது அறிவை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே அரசியலுக்கு வந்தேன். ரஜினி அரசியல் பயணம் தொடங்கி இருந்தால் அதை  தமிழகத்தில் கொண்டு போய் சேர்ப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருந்தது.அதையும் தாண்டி ஆன்மிக அரசியல் இருந்தது. அதே போல் தற்போதும் ஆன்மிக அரசியலுக்காக பாஜகவில் இணைத்துள்ளேன்" என்று கூறினார்.   

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.