ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

Advertisment

veerammal

மேலூர் அருகே அரிட்டாபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் 79 வயது மூதாட்டி வீரம்மாள் வெற்றி பெற்றுள்ளார். இரண்டு முறை தோல்வியை தழுவிய மூதாட்டி வீரம்மாள் 3-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். 193 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். கடந்த இரண்டு முறை ஊராட்சி மன்ற தேர்தலில் நின்று தோற்றாலும் தனது விடாமுயற்சி காரணமாக இந்தமுறை வெற்றி பெற்றது ஊர் மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 79 வயதில் வீரம்மாள் வெற்றி பெற்ற செய்தி ஊடங்கங்ளில் வெளியானதை பார்த்து தமிழகம் முழுவதும் பொதுமக்கள் அவரைப் பற்றியே பேசுகின்றனர்.

வெற்றி பெற்றது தொடர்பாக பேசிய வீரம்மாள், எனக்கு 79 வயசுப்பா, ரெண்டு முறை தோத்துப்போனேன். இப்ப 3வது முறையா போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறேன். கடைசி மூச்சு வரை ஊர் மக்களுக்காக உழைப்பேன். இந்த வயதிலும் நான் உழைப்பேன்னு என்னை நம்பி ஓட்டுபோட்ட மக்களுக்காக உழைப்பேன் என்றார்.