Advertisment

திருவள்ளுவர் வேணும்னா பெரியாரை ஏற்க கூடாது... எச்.ராஜா அதிரடி!

தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு மற்றும் ருத்ராட்ச மாலையை அணிவித்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், தீபாராதனை காட்டியும், கற்பூரம் ஏற்றியும் பூஜை செய்தார். பின்னர் திருவள்ளுவர் சிலைக்கு காவி உடையணிந்து ருத்திராட்சை மாலை அணிவித்து அர்ஜூன் சம்பத் வழிபாடு செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

bjp

Advertisment

இந்நிலையில் கும்பகோணம் உடையாளுர் அருகே இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்தை வல்லம் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில் இந்நிலையில் ஹெ,ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில், திமுக திக, கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளை குறிப்பிட்டு 'ஈ.வெ.ரா. (பெரியார்) தமிழை காட்டுமிராண்டி மொழி என கூறினார், திருக்குறளை அருவருக்கத்தக்க முறையில் விமர்சித்தார்' என கூறியுள்ளார். மேலும், திருவள்ளுவரை மதிப்பதாக இருந்தால், திக, திமுக, கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் ஈ.வே.ராவை ஏற்க மாட்டோம் என அறிவிக்க வேண்டும்' என கூறியுள்ளார்.

communist h.raja stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe