Skip to main content

''இன்னும் எத்தனை முறை புகாரளிப்பது... அடுத்து ஆளுநரை சந்திப்போம்''-எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி

Published on 10/04/2022 | Edited on 10/04/2022

 

'' How many more times to report ... we will meet the Governor next '' - MR Vijayabaskar Interview

 

கரூரில் நெடுஞ்சாலைகளில் போடாத சாலைகளுக்கு பணம் எடுக்கப்பட்டுள்ளதாக கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கரை சந்தித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு கொடுத்ததோடு, 5 முறை தொடர்ந்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் ஆளுநரை சந்தித்து புகார் அளிக்க உள்ளதாக பேட்டியளித்துள்ளார்.

 

கரூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறையில் நடக்கும் ஊழல்கள் குறித்து நேற்று தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளரை சந்தித்து  முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்திருந்தார். இன்று கரூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து இந்த பிரச்சனைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று புகார் மனு வழங்கி முறையிட்டார்.

 

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், புகார் அளிக்கப்பட்டுள்ள சாலையில் வேலையை நிறுத்திவிட்டு விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என  வலியுறுத்திய நிலையில், மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் நெடுஞ்சாலை துறையில் அதிகபட்ச நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தன்னிடம் இல்லை என்று தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

 

கரூரில் நெடுஞ்சாலை துறையில் நடைபெறும் ஊழல் குறித்து தொடர்ந்து புகார் அளித்து வருகிறோம். 5 முறை கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் புகார் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காமல் சாலைகள் மட்டும் போட்டு வருகின்றனர். போடாத சாலைக்கு பணம் எடுக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக எதிர்கட்சி தலைவர் சட்டமன்றத்தில் பேச வலியுறுத்தி உள்ளோம்.

 

திமுகவைச் சேர்ந்த 'சங்கர் ஆனந்த் இன்ஃப்ரா' என்ற ஒப்பந்ததாரர் நிறுவனம் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது. அந்த ஒப்பந்ததாரருக்கு மட்டுமே கரூர் மாவட்டத்தில் டெண்டர் விடப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த முறைகேடு தொடர்பாக இனிமேலும் யாரிடம் புகார் கொடுக்க வேண்டும் என்று எங்களுக்கு தெரியவில்லை. விரைவில் ஆளுநரை சந்தித்து இது தொடர்பாக மனு அளிக்க இருக்கிறோம். இந்த புகார் மீது நீதிமன்றத்தில் உரிய தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

 

நேற்று நள்ளிரவு கோடாங்கிபட்டி அருகே கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 'சங்கர் ஆனந்த் இன்ஃப்ரா' ஒப்பந்ததாரருக்கு சொந்தமான டிப்பர் லாரி தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது. இதில் அதிமுகவை சேர்ந்த எங்களது நிர்வாகிகளை குற்றவாளிகளாக மாற்றி, வழக்கு பதிய உள்ளனர். ஆனால், அந்த டிப்பர் லாரியை அவர்களாகவே தீ வைத்து எரித்து விட்டு நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர் என்று தெரிவித்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் அதிகாரிக்கு கொலை மிரட்டல்; எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்கு!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
Case registered against ADMK M.R.Vijayabaskar for threatening election officer

கரூர் மாவட்டத்தில் தாந்தோனி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வரும் வினோத்குமார், பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அமலில் உள்ள தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்கவும் வீடியோ பதிவுகள் செய்யவும், VST Team 1 ன்  அதிகாரியாக கரூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரால்  நியமனம் செய்யப்பட்டு  தேர்தல் பணியை  மேற்கொண்டு வருகிறார். தேர்தல் பணிக்காக  அரசு வாகனம்  வழங்கப்பட்டு, ஓட்டுநராக கங்காதரன், வீடியோ கிராஃபர் வீடியோ கேமராவுடன்  வழங்கப்பட்டு தேர்தல் பணியை செய்து வருகிறார்.

கரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதியில் மார்ச் 31ஆம் தேதி அதிமுக கட்சியின் கரூர் பாராளுமன்ற வேட்பாளர் தங்கவேல் என்பவருக்கு தெருமுனை தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டி,  மண்மங்கலம் தாலுகா கரைப்பாளையம் என்ற ஊரைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் கார்த்திக் என்பவர் அனுமதி கேட்டு மனு செய்திருந்த நிலையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரால் தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது

கரூர் மாவட்டம் மன்மங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட கரூர் சட்டமன்ற தொகுதியில் மார்ச் 31ஆம் தேதி காலை முதல் முதல் தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக வேட்பாளர்  தங்கவேல் என்பவருடன் அவரை ஆதரித்து,  முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் அதிமுக கரூர் மாவட்ட செயலாளர், விஜயபாஸ்கர்,  அதிமுக கட்சியைச் சேர்ந்த ரமேஷ்குமார் , அதிமுக கரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் மதுசூதணன்  வேலாயுதம்பாளையம், கார்த்திக்  கரைப்பாளையம், ஜெகன் உள்ளிட்ட பலர் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் தேர்தல் பிரச்சார வாகனத்துடன் தெருமுனை பிரச்சாரம் செய்து வந்தனர்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது மேற்படி, தெருமுனை பிரச்சாரத்திற்கு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி சமார் 10 கார்களுக்கு மேல் வேட்பாளருடன் தெருமுனை பிரச்சாரத்திற்கு அணிவகுத்து வந்தது. அப்போது நெரூர் அருகே உள்ள அரங்கநாதன்பேட்டை என்ற ஊரில் தெருமுனை பிரச்சாரத்தின்போது ஜெகன் என்பவரிடம் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றும்படியும், வாகனங்கள் அணிவகுத்து வர தேர்தல் விதிமுறைப்படி அனுமதி இல்லை என்றும் தேர்தல் கண்காணிப்பு அலுவலர் வினோத்குமார் கூறியுள்ளார் .

அதனை தொடர்ந்து மதியம் 02.45 நெரூர் அருகே உள்ள மறவாபாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் அதிமுக கரூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் தங்கவேல் தேர்தல் பிரச்சார வாகனங்களுக்கு பின்னால்  தேர்தல் கண்காணிப்பு குழுவுடன் அரசு வாகனத்தில் சென்றபோது, கரூர் மாவட்ட அதிமுக கட்சியின் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக கட்சியைச் சேர்ந்த ரமேஷ்குமார், கரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் மதுசூதணன், கார்த்திக், ஜெகன் மற்றும் பலர் தேர்தல் கண்காணிப்பாளர் வினோத்குமார் சென்ற அரசு வாகனத்தின் முன்பு சட்டவிரோதமாக ஒன்று கூடி, வழிமறித்து தேர்தல் பணியை செய்ய விடாமல் தடுத்து வாகனத்திற்குள் இருந்த தேர்தல் கண்காணிப்பு பிரிவு அதிகாரி வினோத்குமாரை பார்த்து, " நீ ஓவரா பண்ற"," வண்டிய தேக்குயா பார்க்கலாம்", என்றும், "யோவ் என்றும் ஓவரா ரூல்ஸ் பேசுகிறாய்" என்றும், "கேஸ் தான போடுவ போட்டுக்கோ" என ஒருமையில் பேசியுள்ளனர். மேலும் ரமேஷ்குமார் என்பவர் வினோத் குமாரை ஆபாசமாக பேசியும் வாகனத்தை சூழ்ந்துகொண்டும் வீடியோ கிராஃபர் ஹரிஹரன் என்பவரை வீடியோ பதிவு செய்ய விடாமல் தடுத்தும்,  கொன்னுருவோம் என கொலை மிரட்டல் விடுத்ததோடு அனைவரும் வினோத்குமாரை  தாக்க முற்பட்டனர்.

அப்போது அங்கிருந்த காவலர்கள் அவர்களிடமிருந்து பாதுகாப்பாக தன்னை மீட்டதாக வினோத்குமார் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, வாங்கல் காவல் நிலையத்தில் வினோத் குமார் அளித்த புகார் அடிப்படையில் , முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 5 பேர் மீது, அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாச வார்த்தைகளால் திட்டுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

Next Story

“எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது விசாரணை மேற்கொள்ள ஆளுநர் அனுமதி மறுக்கும் மர்மம் என்ன?” - ஜோதிமணி எம்.பி.

Published on 23/11/2023 | Edited on 23/11/2023

 

Jothimani M.P says What is the mystery behind the Governor's denial of permission to investigate M.R.Vijayabaskar?

 

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர். விஜயபாஸ்கர். அவரது பதவிக் காலத்தில் வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவிப்பு, ஊழல் வழக்கு உள்ளிட்ட வழக்குகளை எதிர்கொண்டிருந்தார். இந்த சொத்துக் குவிப்பு வழக்கில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியிருந்தனர். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணைக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் தற்போதைய தமிழக அரசு கோப்புகளை அனுப்பி இருந்தது. ஆனால், இதுவரையிலும் ஆளுநர் அதற்கு ஒப்புதல் தரவில்லை.

 

இந்த நிலையில், தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ள மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாட்டிற்கு எதிராகவும், கிடப்பில் வைத்திருக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உடனே உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கடந்த 31 ஆம் தேதி அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்ய கடந்த மார்ச் மாதம் அனுமதி கோரிய நிலையில், அதற்கும் இன்னும் ஒப்புதல் வழங்கப்படவில்லை. ஆளுநர் திருப்பி அனுப்பிய கோப்புகளுக்கு அரசு உரிய விளக்கத்துடன் மீண்டும் அனுப்பி வைத்தபோதும் ஆளுநர் ஒப்புதல் தர மறுத்துள்ளார்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில்  கடந்த 20 ஆம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆளுநர் அலுவலகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், ‘முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், ரமணா மீதான குற்றவியல் நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்கிவிட்டது. எம்.ஆர். விஜயபாஸ்கர் மீதான கோப்பு ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எம்.ஆர். விஜயபாஸ்கர் மீதான விசாரணை கோப்புகளுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காதது குறித்து காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “அதிமுகவின் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஊழல் வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அனுமதி கேட்டபோது கோப்புகள் வரவில்லை என்று கூறிவிட்டு தற்போது வந்துள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். ஒரு ஆளுநர் இவ்வளவு அப்பட்டமாக பொய் சொல்வதன் அவசியம் என்ன? இதில் முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், ரமணா மீதான கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். ஆனால், முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது விசாரணை மேற்கொள்ள ஆளுநர் அனுமதி தர மறுக்கிறார். இதற்கு பின்னால் இருக்கும் மர்மம் என்ன?

 

இந்த மர்மத்துக்குப் பின்னால் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இருக்கிறாரா? என்று கேள்வி கேட்க வேண்டியுள்ளது. கரூரில் மட்டும் அதிமுகவுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே நல்ல உறவு இருப்பது போல தோன்றுகிறது. தமிழகம் முழுவதும் பல டீலிங் நடத்தும் வசூல் ராஜாவாக அண்ணாமலை இருக்கிறார். இதேபோன்ற டீலிங்கில் தான் விஜயபாஸ்கருக்கும் ஆளுநருக்கும் இடையே அண்ணாமலை இருந்துள்ளாரா? என்ற கேள்வியும் எழுகிறது. இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இதற்கு பின்னால் இருக்கும் டீலிங் என்ன என்பதை விளக்க வேண்டும்” என்று கூறினார்.