Skip to main content

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஹெலிகாப்டர் சேவை கொண்டுவருவேன் -அ.ம.மு.க. வேட்பாளர்

Published on 29/03/2019 | Edited on 29/03/2019

நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்டது ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி இதில் உள்ள சத்தியமங்கலத்தில் அ.ம.மு.க. சார்பில் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட வேட்பாளர் ராமசாமி செய்தியாளர்களிடம் பேசும்போது  

 

helicopter service to avoid traffic - ammk candidate

 

"நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் படுகர் இன மக்களுக்கு சலுகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் வெற்றி பெற்றால், பச்சை தேயிலை விலை தற்போது கிலோ 17 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகிறது. அதை ரூபாய் 30 வரை கிடைக்க நடவடிக்கை எடுப்போம். சுற்றுலா தலமான ஊட்டி செல்வதற்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரோப்கார் மற்றும் ஹெலிகாப்டர் சேவை கொண்டுவருவேன்.  மலை பகுதி மேம்பாட்டுத் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் மீண்டும் இத்திட்டத்தை கொண்டுவந்து பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். ஊட்டியில் அனைத்து வசதிகளுடன் கூடிய பல்நோக்கு மருத்துவமனை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பவானிசாகர் பகுதியில் கமலா ஆரஞ்சு விளைவிப்பதற்கேற்ற சீதோஷ்ண நிலை உள்ளதால் தோட்டக்கலைத்துறை மூலம் கமலா ஆரஞ்சு சாகுபடி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
 


ஏற்கனவே இந்த தொகுதியில் போட்டியிட்ட ஆ ராசா 2ஜி வழக்கில் சிக்கி அதிலிருந்து மீண்டு வருவது குறித்த முழு கவனத்துடன் இருந்ததால் தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. நேற்று வேட்புமனு பரிசோதனையின்போது ஆ ராசாவின் வேட்பு மனுவை பரிசீலனை செய்த தேர்தல் அலுவலர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு  நிலுவையிலுள்ள 2ஜி வழக்கு குறித்த விபரங்களை பத்திரிகைகளில் விளம்பரம் செய்து அதன் விபரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்" என தெரிவித்தார்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ராகுல் காந்தி பயணித்த ஹெலிகாப்டரில் சோதனை!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Rahul Gandhi's helicopter was tested

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அதன்படி பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரமாக செய்து வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள், அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின்  வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராகுல் காந்தி இன்று (15.04.2024) நீலகிரி மாவட்டம் பந்தலூர் வந்தடைந்தார். அப்போது அங்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர் ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரில் சோதனை மேற்கொண்டனர். ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து தேவாலயம் செல்லும் ராகுல் காந்தி அங்குள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் கலந்துரையாடுகிறார். கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கு செல்லும் வழியில் பந்தலூர் பகுதிக்கு ராகுல் காந்தி வருகை புரிந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நீலகிரியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதற்காக ஹெலிகாப்டர் மூலமாக உதயநிதி ஸ்டாலின் நேற்று (14.04.2024) நீலகிரி வந்திருந்தார். அப்போது அவர் வந்த ஹெலிகாப்டரையும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

உதயநிதி சென்ற ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
Udayanidhi's helicopter flying force test

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அதன்படி பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரமாக செய்து வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள், அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின்  வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நீலகிரியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆர.ராசாவை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக ஹெலிகாப்டர் மூலமாக உதயநிதி ஸ்டாலின் நீலகிரி வந்திருந்தார். இந்நிலையில் அவர் வந்த ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர்.