Skip to main content

“ஆதீனம் மீதல்ல காவி துண்டு மீது கை வைத்தால் கூட விடமாட்டோம்..” - எச்.ராஜா ஆவேசம் 

Published on 09/06/2022 | Edited on 09/06/2022

 

H Raja spoke about minister sekar babu

 

தேனி மாவட்ட பா.ஜ.க சார்பில் மத்திய அரசின் 8 ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் தேனி பங்களா மேட்டில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எச்.ராஜா கலந்து கொண்டார்.

 

இதில் பேசிய அவர், “அமைச்சர் சேகர்பாபு, மதுரை ஆதீனத்தை மிரட்டுகிறார். ‘முதல்வர் அடக்கி வைத்துள்ளதால் தான் அமைதியாக இருக்கிறோம்’ என்கிறார். அமைச்சர் நாவை அடக்கிப் பேச வேண்டும். ஆதினத்தை மட்டுமல்ல, காவி துண்டு அணிந்தவர்களை சீண்டினால்கூட விடமாட்டோம். மதுரை ஆதீனம் தலைமையை ஏற்று அவரின் பின்னே பாஜகவினர் நிற்பார்கள். 


கோயில் நிலங்களை மீட்கிறோம் என்கிறார். ஆனால் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள க்யூன்ஸ் லேண்ட் அகற்றப்படவில்லை. அவர்களிடம் இருந்து ஒன்பதரைக் கோடி வசூலிக்கப்பட்டிருக்க வேண்டும். அதையும் வசூலிக்கவில்லை. முதலில் திமுக காலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட கட்டடங்களை அகற்றுங்கள்.


இந்து அறநிலைய சட்டத்தை அமைச்சர் படிக்க வேண்டும். அதில் ஏதாவது கோயில் நிர்வாகத்தில் தவறு இருந்தால் அதைச் சரி செய்து மீண்டும் அந்தக் கோயில் கமிட்டியிடம் வழங்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் அவ்வாறு திமுக அரசு நடக்கவில்லை. தமிழ் வளர்க்கிறோம் எனக் கூறிக் கொண்டு, தமிழின விரோதிகளாக திமுகவினர் உள்ளனர். இவர்களால் இன்னும் 10 ஆண்டுகளில் தமிழகத்தில் தமிழர்கள் மைனாரிட்டி ஆவார்கள். 


தமிழகத்தில் மதுவை அறிமுகம் செய் துவைத்து தமிழர்களை குழந்தை பெற்றுக் கொள்ளக் கூட முடியாத அளவிற்கு மாற்றியுள்ளனர். மது விற்பனையால் கிடைக்கும் 36 ஆயிரம் கோடி ரூபாயில் தான் அரசாங்கத்தை நடத்தி கொண்டிருக்கின்றனர்.

 
சிதம்பரத்தில் 1867ல் சவுத் ஆர்காடு டிஸ்ட்ரிக்ட் கலெக்டர் சிதம்பரம் கோயில் சொத்து தீட்சிதர்களுக்கு சொந்தமானது எனக் குறிப்பிட்டுள்ளார். 2010ல் கோயில்கள் தொடர்பான வழக்கில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் சைவ, வைணவக் கோயில்கள் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வராது எனக் குறிப்பிட்டுள்ளது. சட்டவிதிகளை மீறி அறநிலையத்துறை செயல் அலுவலர்களை நியமித்துள்ளது. தற்போது வரை அறநிலையத்துறை 10 லட்சம் கோடி ரூபாய் கொள்ளை அடித்துள்ளது. எனவே கோயில்களை விட்டு அரசு வெளியே செல்ல வேண்டும்.


திமுக அரசு இதுவரை எந்தத் திட்டத்தையும் வழங்கவில்லை. ஸ்டிக்கர் ஒட்டுவது தான் அவர்களுடைய சாதனையாக உள்ளது. இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குதல் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து கேட்டால் இன்னும் 4 ஆண்டுகள் இருக்கிறது செய்வோம் என்கிறார்கள். அதற்குள் தமிழகத்தில் மக்கள் வீதிக்கு வந்து திமுக அரசைத் தூக்கி எறிவார்கள்” என்று பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜக ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திரம் கொண்டு வருவோம்'-நிர்மலா சீதாராமன் 

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேர்தலுக்கு முன்னதாகவே தேர்தல் பத்திரம் தொடர்பான கருத்துக்கள் மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவுகள் இத்தேர்தலில் மிகப்பெரும் பேசு பொருளாக இருந்தது. உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்ட  நிலையில் பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரத் திட்டம் என்பது அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், நன்கொடை வழங்கியோர், நன்கொடையைப் பெற்ற கட்சிகளின் விவரங்களை ஆணையத்திடம் வழங்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவோம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிப்போம். அனைவரும் ஏற்கத்தக்க வகையில் தேர்தல் பத்திரம் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வோம். தேர்தல் பத்திரம் வெளிப்படை தன்மையானது, கருப்பு பணத்தை ஒழிப்பதற்கானது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Next Story

“பா.ஜ.கவை விட ஆபத்தானவர் நிதிஷ்குமார்” - மல்லிகார்ஜுன கார்கே

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Mallikarjuna Kharge says Nitish Kumar is more like BJP

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற தற்போது நடைபெற்று வரும் தேர்தல்கள் மிகவும் முக்கியமானவை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பீகார் மாநிலத்தில் உள்ள கிஷன்கஞ்ச் மற்றும் கதிஹார் தொகுதிகளில் நேற்று (19-04-24) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, “மோடி சமீபகாலமாக அரசியல் சாசனத்தின் மீது மிகுந்த மரியாதையைக் காட்டி வருகிறார். அவர் சொல்வதையே அவர் கடைப்பிடிக்கிறார் என்றால், அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என பேசி வரும் பாஜக தலைவர்கள் எப்படி தப்பிக்க முடிகிறது? அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்கையும் வகிக்காத ஆர்.எஸ்.எஸ் திட்டத்தை செயல்படுத்த பா.ஜ.க களமிறங்கியது. நாட்டில் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தை காப்பாற்ற தற்போது நடைபெறும் தேர்தல்கள் முக்கியமானவை. நாம் தோல்வியுற்றால், நமது வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுவார்கள்.

எங்கள் கூட்டணியில் போட்டியிடும் தேஜஸ்வி யாதவ், நிதிஷ்குமாரின் துரோகத்தை பலமுறை கூறி புலம்பியுள்ளார். நான் அதை ஒரு நல்ல அதிர்ஷ்டம் என்று சொல்கிறேன். பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸை விட நிதிஷ் குமார் போன்றவர்கள் ஆபத்தானவர்கள். நிதிஷ் குமாரிடம் கொள்கைகள் இல்லை. அவர் அதிகாரத்திற்காக மட்டுமே கவலைப்படுகிறார்” என்று கூறினார்.