Skip to main content

''ஆளுநர் அரசியலை புகுத்துவதற்காக பட்டமளிப்பு விழாக்களை பயன்படுத்துகிறார்''-அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு!

Published on 12/07/2022 | Edited on 12/07/2022

 

"Governor uses graduation ceremonies to inject politics"- Minister Ponmudi alleges!

 

 


ஆளுநரின் செயல்பாட்டால் மதுரை காமராசர் பல்கலைக்கழக 54 வது பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க போவதாக தமிழக  தெரிவித்துள்ளார்.

 

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசுகையில், ''பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்யும் பொழுது உயர்கல்வித்துறை செயலாளர் மற்றும் இணை வேந்தர் என்ற முறையில் எங்களுடன் பேசி, யாரை சிறப்பு விருந்தினராக போடலாம் என கலந்தாலோசிக்க வேண்டும். பட்டமளிப்பு விழாக்களில் முதலில் வேந்தர் அதன் பிறகு இணை வேந்தர் அதன் பிறகு ஒரு சிறப்பு விருந்தினர் என்ற ஒருவரை போடுவார்கள். கௌரவ விருந்தினர் என்று போட மாட்டார்கள். ஆனால் இதில் கௌரவ விருந்தினர் என்று ஒருத்தரை போட்டு மத்தியில் இருக்கக்கூடிய அமைச்சர் எல்.முருகன் பெயரை போட்டுள்ளார்கள். அவர் கல்வித்துறை சார்ந்த அமைச்சரும் இல்லை, அவர் ஒரு துணை அமைச்சர். பட்டமளிப்பு விழாவில் கௌரவ விருந்தினர் என்று போட வேண்டிய அவசியம் இல்லை. அப்பொழுது இதில் நோக்கம் என்ன? ஆளுநருடைய நோக்கம் என்ன? அவர் அரசியலை பல்கலைக்கழகங்களில் புகுத்துவதற்காக பட்டமளிப்பு விழாக்களை பயன்படுத்துகிறார் என நாங்கள் கருதுகிற காரணத்தினால் இந்த பட்டமளிப்பு விழாவை நான் புறக்கணிக்கிறேன்.

 

மாணவர்கள் அரசியலை தெரிந்துகொள்ள வேண்டும் ஆனால் சேற்றில் அடித்த பந்தாக மாணவர்கள் மாறிவிடக்கூடாது. சுவற்றில் அடித்த பந்தாக இருக்க வேண்டும். மாணவர்கள் அரசியல் தெரிந்து கொள்ளக் கூடாது என்று சொல்லவில்லை. பட்டமளிப்பு விழாவில் அரசியலை பேசாதீர்கள் என்று தான் சொல்கிறோம். ஒரு கட்சி சார்பாக பேசக்கூடாது. மாணவர்களின் எதிர்காலத்தைப் பற்றி, அவர்களுடைய வளர்ச்சியைப் பற்றி பேசுவதற்கு தான் ஒரு பட்டமளிப்பு விழா இருக்க வேண்டுமே தவிர இதுபோன்ற நிகழ்வுகளுக்காக இருக்கக் கூடாது.

 

துணைவேந்தர்களை ஆளுநர் நியமிக்கிறார் அதனால் அவர் இஷ்டத்திற்கு யாரை வேண்டுமானாலும் நியமிக்கிறார். இனி துணைவேந்தர்களை அரசுதான் நியமிக்க வேண்டும் என்றுதான் சட்டமன்றத்திலேயே தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பி வைத்திருக்கிறோம். எல்.முருகனை பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளக் கூடாது என்று நான் சொல்லவில்லை. கௌரவ விருந்தினர் என்று போட்டு ஏன் கலந்து கொள்ள வேண்டும். இணைவேந்தராக இருக்கக்கூடிய எனக்கு மேலாகவா அவர் இருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் ஒரு புரோட்டோகால் இருக்கு.

 

சிறப்பு விருந்தினர் என்று ஒருவரை தான் அழைப்பார்கள் இதில் இரண்டு பெயர் போட்டுள்ளது. பலராமன் என்பவர் சிறப்பு விருந்தினர் அவரும் பேசுகிறார். அதற்கு அடுத்து கௌரவ விருந்தினர் என எல்.முருகன் பேசுகிறார். நான் கடந்த முறை உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொழுது நாங்களே சென்று பட்டமளிப்பு விழாக்களை நடத்தியதுண்டு. பட்டமளிப்பு விழா என்பதற்கும் ஆளுநருக்கும் சம்பந்தம் கிடையாது. அந்த பல்கலைக்கழகத்தை நடத்துகிற துணை வேந்தருக்குத்தான் அந்த அதிகாரம். பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தான் அந்த அதிகாரம். இவர் போனால் அங்குள்ள ஆசிரியர்களை கூப்பிட்டு பேசுவது, புதிய கல்விக் கொள்கை பற்றி பேசுவது இதெல்லாம் தவறான செய்திகள் என்ற காரணத்தை அவர்களுக்கு  வலியுறுத்துவதற்காக தான் இந்த பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிக்கிறேன்'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.