Skip to main content

“ஆளுநர் ரவியா? ஆன்லைன் ரம்மியா?” - முத்தரசன்

Published on 29/12/2022 | Edited on 29/12/2022

 

“Governor Ravi? Online Rummy?” - Mutharasan

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆளுநருக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.

 

அரசியலமைப்பு, மதச்சார்பின்மை, மாநில உரிமைகளுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதாகவும் மத்திய அரசு அவரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டது. இந்தப் பேரணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 4000 மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர், தேசிய பொதுச் செயலாளர் ராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “ஆளுநர் ரவி என்பவர் யாரென்பதே எனக்குத் தெரியாது. தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமும் நமக்குக் கிடையாது. ஆனாலும் இந்த மாநிலத்தின் ஆளுநர் அவர். ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்டவர். சம்பளத்திற்காக நியமிக்கப்பட்டவர் அவர். அவருக்கு நமது வரிப்பணத்தைத்தான் மாநில அரசு சம்பளமாகக் கொடுக்கிறது. அவர் தங்கி இருக்கும் மாளிகைக்குத் தேவையான பணிகள் அனைத்தையும் மேற்கொள்வது மாநில அரசு. அவருக்கு உரியப் பாதுகாப்பை வழங்குவதும் தமிழக அரசுதான்.

 

இவை அனைத்தையும் பெற்றுக்கொண்டு தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் எதற்கும் கையெழுத்துப் போடமாட்டேன் என அடம் பிடிக்கும் ஆளுநராக ரவி இங்கே இருக்கிறார்.

 

ஆன்லைன் சூதாட்டத்தில் தினசரி செத்துக் கொண்டு இருக்கிறார்கள். லட்சக்கணக்கான பணத்தை இழக்கிறார்கள். கடன் தொல்லையால் இதுவரை 60க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். அவர்கள் எல்லாம் சாதாரணமானவர்கள் அல்ல. மிகப்பெரிய உத்தியோகங்களில் இருப்பவர்கள். படித்த பட்டதாரிகள். வெளியில் தெரியாமல் தற்கொலை செய்து கொண்டவர்கள் எத்தனை பேர் என்பது எனக்குத் தெரியாது. 

 

“Governor Ravi? Online Rummy?” - Mutharasan

 

சூதாட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி அவசர சட்டத்தை ஆளுநருக்கு அனுப்பிய பிறகு அதற்கு ஒப்புதல் அளிக்கிறார். நிரந்தர தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுவிட்டது. பல மாதங்களுக்குப் பிறகு அரசிடம் விளக்கம் கேட்கிறார். அடுத்த 24 மணி நேரத்தில் அரசு அதற்குரிய விளக்கத்தை அளிக்கிறது. அதன் பின் ஆளுநர் இதுவரை அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. மாநிலத்தின் முதல்வரும் நேரில் சந்தித்து மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கக் கேட்கிறார். தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஆளுநர் உடனடியாக கையெழுத்துப் போடவேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளது. 

 

அவர் யாரையும் மதிக்காமல் சூதாட்டத்தை நடத்துபவர்கள் 9 பேரை ஆளுநர் மாளிகைக்கு அழைத்து விருந்து கொடுத்துப் பேசுகிறார். இதற்கு என்ன காரணம். தமிழகத்தில் உள்ளவர்கள் தொடர்ந்து சாக வேண்டும். ஆளுநர் அவர்களுடன் உறவாக இருப்பார் என்றால் இந்தக் கள்ள உறவிற்கு என்ன பெயர். இந்தக் கள்ள உறவை ஆளுநர் மேற்கொள்ளலாமா?” எனக் கேள்வி எழுப்பினார்.

 

முன்னதாக மாநிலச் செயலாளர் முத்தரசன் பேரணியின்போது “ஆளுநர் ரவியா? ஆன்லைன் ரம்மியா?” என முழக்கமிட்டதும் குறிப்பிடத்தக்கது.

 

ஆளுநர் மாளிகை முற்றுகை பேரணியில் ஈடுபட்ட 4000த்திற்கும் அதிகமானோர் தற்போது காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் பேருந்துகளில் ஏற்றிச் சென்று சமுதாய நலக்கூடங்களில் தங்க வைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தலை சீர்குலைக்க விஷமிகள் பொய் பிரச்சாரம்! சிபிஎம் வேட்பாளர் புகார்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
CPM candidate complains that poisoners are spreading lies to disrupt elections!

தேர்தலை சீர்குலைக்க சமூக வலைத்தளங்களில் விஷமிகளால் சில வீடியோவை வைத்து பொய் பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஎம் வேட்பாளர்  சச்சிதானந்தம் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.                              

இந்தநிலையில் இந்த தேர்தலை சீர்குலைக்க சில விஷமிகள் வாட்ச் அப் போன்ற வலைத் தளங்களில் பொய்யான வீடியோவை பரப்பி வருகிறார்கள். இது தொடர்பாக சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் திண்டுக்கல் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் தேர்தல் ஆணையத்திடமும் புகார் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மீது அவதூறு பரப்பும் வகையில் வெட்டி ஒட்டப்பட்ட வீடியோ ஒன்றை வாட்ச் அப் சமூக வலைதளங்களில் விஷமிகள் பரப்பி வருகிறார்கள். உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலர் இதில் தலையிட்டு இந்த அவதூறு பரப்பும் ஒளிபரப்பை தடை செய்ய வேண்டும். அவ்வாறு அவதூறு பரப்பியவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆர்.சச்சிதானந்தம் தனது புகார் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story

“கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும்” - கே. பாலகிருஷ்ணன்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
State Secretary of the Communist Party of India in Chidambaram K. Balakrishnan voted

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் காலையில் இருந்து பொதுமக்கள் அவர்களது வாக்கினை ஆர்வமுடன் செலுத்தி வருகின்றனர். இதில் சிதம்பரம் மானா சந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அவரது மனைவி கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஜான்சி ராணியுடன் சென்று வாக்கினை பதிவு செய்தார்.

அப்போது அவர் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கடந்த 2019 தேர்தலை விட இந்த தேர்தலில் தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெறுவார்கள்.  தமிழகத்தில் உள்ள வாக்காளர்கள் மத்தியில் ஒரு ஆட்சி மாற்றம் வேண்டும் என தெளிவாக உள்ளனர். மோடி வெற்றி பெற முடியாது என்பதை பல ஆய்வுகள் கூறுகிறது.

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்தியா கூட்டணி தலைவர்கள் மேற்கொண்ட பிரச்சாரம் பொதுமக்களின் வாழ்வாதாரம், அரசியல் பிரச்சனைகளை முன்னிறுத்தி இருந்தது. கூட்டாட்சி தத்துவத்தையும் இந்தியாவின் பன்முக தன்மையை பாதுகாப்பது. விலைவாசி உயர்வை தடுப்பது. வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்க வேண்டும் என்ற மக்களின் அடிப்படையிலான பிரச்சனைகளை வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளோம். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்  எனக்கூறினார்.