Skip to main content

எடப்பாடி வெளிநாடு போன நிலையில் கவர்னரின் கோபம்! ராஜ்பவனில் பரபரப்பு!

Published on 31/08/2019 | Edited on 31/08/2019

எடப்பாடி வெளிநாட்டுக்குப் போயிருக்கும் நிலையில், கவர்னர் மாளிகையான ராஜ்பவனில் பரபரப்பாக காணப்படுகிறது. இது பற்றி விசாரித்த போது, கவர்னரின் செயலாளரான ராஜகோபால் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை பற்றிய விழிப்புணர்வை பரவலாக்கணும்னு விரும்பியதாக சொல்லப்படுகிறது. இதனால்  ஒவ்வொரு பல்கலைக்கழகமாக சென்று, விவாத அரங்குகளை நடத்தத் திட்டமிட்டதாக கூறுகின்றனர். இதனையடுத்து தன் முதல் நிகழ்ச்சியை 29-ந் தேதி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடத்த திட்டம் போட்டதாக அங்கிருந்தவர்களுக்குத் தகவல் கொடுத்துள்ளார். இதை கவனித்த பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கோபிநாத், ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருக்கார். 
 

governor



அதில் நம் பல்கலைக்கழகத்துக்கு ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலாளர் வர இருக்கிறார். அதனால், அன்றைக்கு அனைவரும் வர வேண்டும் குறிப்பிட்டிருந்தார். பல்கலையில் கவர்னரின் செயலாளருக்காக இப்படி ஒரு சுற்றறிக்கையைப் பார்த்து கடுப்பான பேராசிரியர்கள், "பல்கலைக்கழக துணைவேந்தரான ஆளுநர் வந்து ஆலோசிக்கலாம்... அவருடைய உதவியாளர் நிலையில் இருக்கும் அதிகாரி எப்படி நம்மை அழைத்துக் கூட்டம் போடுவார்? "அவருக்கு என்ன அதிகாரம் இருக்கு?'ன்னு கொந்தளிச்சதாக தகவல் வெளியானது. உடனே சம்மந்தப்பட்ட துறை அமைச்சரான அன்பழகனுக்கு அவர்களிடம் இருந்து புகார்கள் அனுப்பியுள்ளனர். இது தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பார்வைக்குப் போக, அந்த விஷயம் கவர்னர் வரை சென்று கவர்னரை கோபமாக்கியதாக கூறுகின்றனர். 
  governor



இதனால் நிகழ்ச்சியை உடனடியாக ரத்து செய்துள்ளார்கள். இருந்தாலும் இந்த நிகழ்வில் நிறைய சந்தேகம் நீடிக்குது என்று கூறுகின்றனர். நீண்ட நாட்களாக அந்தப் பல்கலைக் கழகத்தில் தற்காலிகப் பணியாளர்களாக இருந்த 60 பேரை நிரந்தரப் பணியாளர்களாக தற்போது நியமனம் செய்ய போவதாக தகவல் வருகிறது. அதேபோல் அங்கே 26 உதவிப் பேராசிரியர்கள், 14 இணைப் பேராசிரியர்கள், 14 பேராசிரியர்கள்னு மொத்தம் 54 பதவிகளுக்கான காலி பணி இடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறுகின்றனர். இப்படிப்பட்ட நேரத்தில் எதுக்கு ஆளுநரின் செயலாளர் நடவடிக்கையால் பேராசிரியர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர். கவர்னரின் செயலாளர் விசிட் பற்றி தனக்குத் தெரியாது என்று உயர்கல்வி அமைச்சர் சொன்னதாக தெரிவிக்கின்றனர். திருச்சி விவாத அரங்கை நான் உறுதி செய்யவில்லை என்று கவர்னரின் செயலாளர் ராஜகோபாலும் விளக்கம் கொடுத்து உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.