Skip to main content

கவர்னர் - முதல்வர் சந்திப்பு... பின்னணியை அறிந்த அமைச்சர்கள் நிம்மதி...

Published on 05/11/2019 | Edited on 05/11/2019

 

தமிழக அமைச்சரவையை மாற்றி அமைக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டிருக்கிறார் என்று கடந்த சில வாரங்களாக பரபரப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் நேற்று கவர்னரை அவசரமாக சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி. அவருடன் தலைமைச் செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி ஆகியோரும் சென்றிருந்தனர். 


 

EPS



கவர்னரை எடப்பாடி பழனிசாமி சந்திக்க செல்கிறார் என்றதும், அமைச்சர்கள் சிலருக்கு கிலியை ஏற்படுத்தியிருந்தது. அமைச்சர் பதவியை எதிர்பார்த்து காத்திருந்த எம்எல்ஏக்கள் சிலர் உற்சாகமாக இருந்தனர். ஆனால் அமைச்சரவை மாற்றம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. 

 

இந்த சந்திப்பு குறித்து விசாரித்தபோது, அயோத்தி பிரச்சனை தொடர்பான வழக்கில் விரைவில் தீர்ப்பு வரலாம். அந்த சமயங்களில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்த வகையிலும் சீர்குலைந்துவிடாமல் இருப்பதற்கான முன் முயற்சிகளை எடுத்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மற்றும் டிஜிபிக்கு கவர்னர் அறிவுறுத்தியுள்ளார் என்றும், இந்த சந்திப்பில் இதுதான் முக்கியமாக விவாதிக்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவிக்கிறது ராஜ்பவன் வட்டாரம். 


 

இந்த நிலையில் டிஜிபி திரிபாதியிடம் இருந்து காவல்துறை அதிகாரிகளுக்கு ஒரு உத்தரவு அவசரமாக பறந்திருக்கிறது. அந்த உத்தரவில், வருகிற 10ஆம் தேதியில் இருந்து அடுத்த உத்தரவு வரும் வரை காவலர்கள் யாரும் விடுமுறை எடுக்க அனுமதிக்கக்கூடாது என்று அறிவுறுத்தியிருக்கிறார். 
 

கவர்னர் சந்திப்புக்குப் பிறகு அதன் பின்னணியை அறிந்ததாலும், அமைச்சரவை மாற்றம் செய்தி எதுவும் வராததாலும், ஜீனியர் அமைச்சர்கள் சிலரும், குற்றச்சாட்டுக்களுக்கு ஆளான அமைச்சர்களும் பதவியை தக்க வைத்த சந்தோஷத்தில் நிம்மதியாக உள்ளனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“வாம்மா மின்னல் என்பது போல ஆளுநர் இருக்கிறார்” - அமைச்சர் உதயநிதி கலகல பேச்சு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Governor is like Lightning Minister Udayanidh speech 

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பிரகாசை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மொடக்குறிச்சி, ஒத்தக்கடை பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “வடிவேலு காமெடியில் வருவதுபோல், ‘வாம்மா மின்னல்’ என ஆளுநர் இருக்கிறார். ‘வாம்மா மின்னல்’ என்பது போல ஆளுநர் எப்போது வருவார். எப்போது போவார் என்றே தெரியாது” எனப் பேசி கூட்டத்தில் இருந்த மக்களிடம் கலகலப்பை ஏற்படுத்தினார். 

Next Story

அமைச்சரை பதவி நீக்கம் செய்ய மேற்கு வங்க ஆளுநர் வலியுறுத்தல்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
West Bengal Governor insists on dismissing the minister

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில், 42 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில், ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7,13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்ட்டி மேற்குவங்க மாநிலத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் 42 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அம்மாநில முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கடந்த மார்ச் மாதம் 10 ஆம் தேதி (10.03.2024) வெளியிட்டார். அப்போது தேர்தலில் போட்டியிடும் 42 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் மம்தா பானர்ஜி அறிமுகம் செய்திருந்தார். இதனையடுத்து மம்தா பானர்ஜியும் அக்கட்சியினரும் தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதால் மேற்கு வங்க கல்வி அமைச்சர் பிரத்யா பாசுவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அம்மாநில ஆளுநர் ஆனந்த் போஸ் மேற்கு வங்க அரசை வலியுறுத்தியுள்ளார். அதே சமயம் ஆளுநர் ஆனந்த் போஸ் அரசியலமைப்பு சட்டத்தை மீறி செயல்படுவதாக அமைச்சர் பிரத்யா பாசு பதிலடி கொடுத்துள்ளார்.