Skip to main content

“அரசு உடனடியாக சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்..” - சி.வி.சண்முகம்

Published on 23/04/2022 | Edited on 23/04/2022

 

"This government should immediately conduct a caste-wise census ..." - CV Shanmugam

 

முன்னாள் சட்டத்துறை அமைச்சர்ரும், விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளருமான சி.வி. சண்முகம் நேற்று விழுப்புரத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “தமிழகத்தில் செயற்கையாக மின்தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆட்சி மாறிய மூன்று மாத காலத்தில் இந்தியாவிலேயே முதன்மையான முதல்வர் சிறந்த முதல்வர் என தன்னைத்தானே கூறும், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும் ஆட்சியில் ஏன் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. 


10 ஆண்டுகள் தொடர்ச்சியாக எங்கள் கட்சி ஆட்சி நடந்த போது அதே கட்டமைப்பு அளவு உற்பத்தி தான் தொடர்ந்தது. அப்போது மின்வெட்டு ஏற்படவில்லை; தற்போது மின்வெட்டு ஏற்பட்டதற்கு என்ன காரணம். இது செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட மின்வெட்டு. திமுக ஆட்சிக்காலத்தில் மின்வெட்டு என்ற பெயரில் தனியாரிடம் அதிக தொகைக்கு மின்சாரத்தை வாங்கி வெளி நாடுகளிலிருந்தும், தரமற்ற நிலக்கரியை அதிக விலைக்கு வாங்கி அதன்மூலம் சம்பாதிப்பதற்காக மின்வெட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது ஊழலுக்கு வழிவகுக்கும்.


தமிழகத்தில் தற்போது அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. சமூக நீதி குறித்து பேசும் முதல்வர் ஸ்டாலின் அதை பின்பற்றவில்லை. ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டியது மிக மிக அவசியம். இந்தியாவில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிகம் வாழும் மாநிலம் தமிழகம். இங்கு 74 சதவீத மக்கள் வாழ்கின்றனர். தாழ்த்தப்பட்ட மக்கள் 18 சதவீதம், பழங்குடியின மக்கள் ஒரு சதவீதம் வாழ்கின்றனர். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு மொத்தம் 19 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அவர்கள் 22 சதவீதத்திற்கு மேல் உள்ளனர். அதனால், சாதிவாரியாக கணக்கெடுத்து அந்த அளவிற்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். 


இதையெல்லாம் கேட்க வேண்டிய திருமாவளவன், சமூக நீதி குறித்து பேசுபவர் ஏன் மௌனமாக இருக்கிறார். உடனடியாக இந்த அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை முழுமையாக நடத்தி முடிக்க வேண்டும். அப்படி நடத்தினால்தான், தமிழகத்தில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு தவிர்த்து 69 சதவீத இட ஒதுக்கீட்டையும் காப்பாற்றமுடியும். பெயரளவில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை கூட்டினார் முதல்வர்.  


முடக்கப்பட்ட குணசேகரன் ஆணையம் மீண்டும் செயல்பட வேண்டும். தற்போது இந்தியா முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பாஜகவின் ஆதரவுடன் ஆட்சி நடத்தும் நிதிஷ் குமார் மக்கள் தொகை கணக்கெடுப்பு சேர்த்து ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். மகாராஷ்டிராவிலும் அதேபோல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது” என  கூறினார். 


இந்தச் சந்திப்பின்போது, அவருடன் நகரச் செயலாளர் ராமதாஸ், ஒன்றியச் செயலாளர் சுரேஷ்பாபு உட்பட பலர் உடனிருந்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்” - தமிழக முதல்வர் உத்தரவு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Tamil Nadu Chief Minister's ordered Drinking water should be distributed without interruption

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக மதுரை, ஈரோடு போன்ற பகுதிகளில் வெப்ப அலை வீசி, மக்களைப் பாதிப்படைய செய்கிறது.

வெப்ப நிலை அதிகமாக இருக்கும் இந்த நிலையில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் அரசு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், அதிகரிக்கும் வெப்பத்தை எதிர்கொள்ள சிறப்பு நடவடிக்ககளை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, நீர்வளத்துறை அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (27-04-24) ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் பேசியதாவது, “கோடைகாலம் அதிக வெப்பம், அதிக குடிநீர் தேவை என்ற இரு நெருக்கடிகளை ஏற்படுத்தும். மேற்கு மாவட்டங்களில் மழை குறைவால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை அதிகாரிகள் விளக்கினர். அணைகளின் நீரை சிக்கனமாக பயன்படுத்தி 2 மாதங்களுக்கு குடிநீர் தேவையை நிறைவு செய்ய வேண்டியுள்ளது. அணைகளில் தற்போது இருப்பில் உள்ள நீரை சிக்கனமாக பயன்படுத்தி சமாளிக்க வேண்டிய சூழல் உள்ளது. கோடை காலத்தில் தண்ணீரின் தேவை அதிகம் தேவை என்பதால் அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட்டு மக்கள் பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

குடிநீர் பற்றாக்குறை உள்ள 22 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் நிதியில் இருந்து ஏற்கெனவே ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதியை மாவட்டங்கள் பகிர்ந்து குடிநீர் வழங்கல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். கூட்டு குடிநீர் திட்டங்கள், நீரேற்று நிலையங்கள் செயல்பட தடையற்ற மின்சாரம் அவசியம் வழங்க வேண்டும். திட்டப்பணிகளுக்கு தடையற்ற மின்சாரம் கிடைப்பதை மின்வாரியத் தலைவர் உறுதி செய்ய வேண்டும். தேர்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில் குடிநீர் விநியோகம் போன்ற முக்கிய பணிகளில் சுணக்கமின்றி கண்காணிக்க வேண்டும். கிராமப்புறங்களில் வறண்ட ஆழ்துளை கிணறுகளுக்கு பதிலாக வேறு குடிநீர் ஆதாரங்களில் இருந்து தண்ணீர் வழங்க வேண்டும். ” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“சர்.பிட்டி தியாகராயர் காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி” - தமிழக முதல்வர் புகழாரம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Chief Minister of Tamil Nadu felicitated for Pioneer of Sir Pitti Thiagarayar Breakfast Scheme

திராவிடக் கட்சியின் தாய் அமைப்பான நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் சர்.பிட்டி தியாகராயர். இந்திய சுதந்திரத்துக்கு பிறகு, முன்னாள் முதல்வர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை தொடங்குவதற்கு முன்பே, அந்த திட்டத்தை சென்னை மாநகராட்சி பள்ளிகளில், சர்.பிட்டி தியாகராயர் தொடங்கி வைத்து முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார். இவரது நினைவாக தான் சென்னை தியாகராயர் நகர் (தி.நகர்) பகுதிக்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்று (27-04-24) சர்.பிட்டி தியாகராயரின் 173ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 

சர்.பிட்டி தியாகராயரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்! அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினால் சென்னையின் கல்வி, மருத்துவ வளர்ச்சிக்குத் தூணாக விளங்கிய மக்கள் தொண்டர்!

காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி!. தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளர், நம் வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.