சட்டமன்றத் தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று (23.03.2021) அண்ணா நகர் தொகுதிக்குட்பட்ட கீழ்ப்பாக்கம் பகுதியில், தொகுதி அதிமுக வேட்பாளர் கோகுல இந்திரா வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பு பகுதியில் வாக்கு சேகரிக்க சென்றபோது, பெரும்பாலானோர் வெளியே வரவில்லை. ஆங்காங்கே நின்றுகொண்டிருந்த ஒரு சிலரிடம் வாக்கு சேகரித்துவிட்டு நடந்து சென்றார்.
பிரச்சாரத்தில் ஈடுபட்ட கோகுல இந்திரா..! (படங்கள்)
Advertisment