Skip to main content

இஸ்ரேல் செல்வதற்கு முன்பு டெல்டா பக்கம் நடைபயணம் போங்க... முதல்வருக்கு விவசாயிகள் அட்வைஸ்

Published on 12/09/2019 | Edited on 12/09/2019

 

முதலமைச்சர் நீர் சிக்கனம் பற்றி அறிய இஸ்ரேல் செல்வதற்கு முன்பு டெல்டா மாவட்டங்களுக்கு நடைபயணம் செல்லுங்கள் என்று காவிரி நீர் பாசன விவசாயிகள் நல சங்கம் மகாதானபுரம் ராஜாராம் தெரிவித்துள்ளார்.

 

71111


 

இதுகுறித்து காவிரி நீர் பாசன விவசாயிகள் நல சங்க தலைவர் மகாதானபுரம் ராஜாராம் விடுத்துள்ள அறிக்கையில், 
 

நீர் சிக்கனம் பற்றி அறிய இஸ்ரேலுக்கு செல்ல உள்ளதாகவும் தனது மேல்நாட்டு பயணம் தொடரும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். நாம் ஒரு ஏக்கருக்கு பயன்படுத்தும் தண்ணீரை ஏழு ஏக்கருக்கு பயன்படுத்தும் நவீன தொழில்நுட்பத்தை இஸ்ரேல் புகுத்தியுள்ளது. கழிவுநீரை மறுசுழற்சி செய்து விவசாயத்துக்கு பயன்படுத்துகின்றனர். இதுகுறித்து அறியவே செல்ல திட்டமிட்டிருக்கிறோம் என்கிறார் முதல்வர்.

 

eps


 

இஸ்ரேல் நிலையமைப்பு பருவநிலை மழை அளவு குறிப்பாக தமிழகத்திற்கு ஏற்றதல்ல. தமிழகத்தில் பருவநிலை, நீர்நிலைகள், ஆறுகள், பயிர் வகைகள் முற்றிலும் உலகத்தையே மலைக்க வைக்கக் கூடியவை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே முப்போகம் பாசனம் பெற்று சோழ வளநாடு சோறுடைத்து என்று பெயர் பெற்றது காவேரி.
 

காவிரி நீரை தேக்கி சிறு ஆறுகளுக்கு பிரித்து கல்லணையை கட்டி உலகுக்கு வழிகாட்டப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்களுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட பல மொழி அரசர்கள் உபரிநீரை தேக்கவும், மழை இல்லாத காலங்களில் பாசனம் தொடரவும் ஏரி குளம் அமைத்ததால் விவசாயம் செழித்தது.
 

ஆனால் இன்றோ வாய்க்கால்கள் கிளை வாய்க்கால்கள் யாவும் அதன் தலைப்பிலேயே ஆக்கிரமிப்புகளால் சிக்கித் தவிக்கிறது. இதனால்தான் சென்ற ஆண்டும், இந்த ஆண்டும் காவிரி நீர் அதிகமாக வந்தும் முக்கொம்புலே கொள்ளிடத்திலே அதை திருப்பி கடலுக்கு விடுகிறோம். ஆனால் இங்கும் கடைமடைக்கு நீர் செல்லவில்லை.


 

 

திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 3573 குளங்கள் ஏரிகள் நீர் செல்லவில்லை. காவிரி நீர் வருவதற்கு முன்பு பெட்டவாய்த்தலை அருகே உய்யகொண்டான்வாய்க்கால், அனலை, கோப்பு, எட்டரை, சோம்பரசம்பேட்டை, புத்தூர், ஆறுகள், குழுமிக்கரை, திருவரம்பூர், காட்டூர், வல்லம் வரை காவிரி நீர் செல்ல வரவில்லை.
 

அதைப்போல் புலிவலம் பகுதியில் காவிரி நீர் பிரிந்து கொடிக்கால் வாய்க்கால் வழியே குழுமணி பேரூர், மருதண்டகுறிசி வழியே குடமுருட்டி சென்று காவிரியில் கலக்கும் ஆனால் நீர் செல்லவில்லை.
 

கல்லணையிலிருந்து கொள்ளிடம் காவிரி வெண்ணாறு கல்லணைக் கால்வாய் வழியாக காவிரி நீர் சோழநாட்டை வளமடைய செய்யும். ஆனால் கடைமடை வரை காவிரி நீர் செல்லவில்லை. முக்கொம்பில் உபரிநீர் நீர் சென்று கொள்ளிடம் வழியாக கடலுக்கு செல்கிறது.
 

தஞ்சாவூரில் 724 ஏரி குளங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் 168 ஏரி குளங்கள் என்று திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நாகையில் மட்டும் 8753 குழந்தைகள் ஏரிகள் காவிரி நீர் செல்ல வில்லை ஆனால் உபரி நீரை கொள்ளிடத்திலிரந்து சுலபமாக திறந்ர் விடுகிறோம்.
 

முதலில் கட்டளை காவேரி கதவணைக்கு வரும் நீர் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் மூலம் திருச்சி தஞ்சை புதுக்கோட்டை குளங்கள் நிரம்ப வேண்டும் . உய்யகொண்டான் வாய்க்கால் மூலம் ஏரிகள் நிரப்பப்பட வேண்டும்.
 

அதன்பிறகு கல்லறைக்கு சென்று கடைமடை வரை தாராளமாக செல்ல வேண்டும். எட்டு வழி சாலை போல் வாய்க்கால்களில் தலையிலிருந்து அகலப்படுத்தி உள் கொள்ளவை அதிகப்படுத்தி அனைத்து ஏரிகளுக்கு நீர் செல்ல வழி செய்தால் முகப்பில் இருந்து உபரி நீரை கொள்ளிடத்திற்கு விடாமல் நீரை சேமிக்க முடியும்.
 

முன்னாள் முதல்வர் காமராஜ் விவசாயிகளை சந்திக்கும் போது அவர்கள் கூறும் கருத்துகளை சரி என்று பட்டாலும் பயனுள்ளதாக இருந்தாலும் உடனே அதை செயல் படுத்த உத்தரவிடுவார் அரசு ஆணை பின்னர் வரும் முதலில் அதனை செயல்படுத்துங்கள் என்பார்.
 

சுதந்திரத்திற்குப் பிறகு கீழ் பவானித்திட்டம் கிருஷ்ணகிரி சாத்தனூர் ஆகிய ஊர்களில் பாயும் தென்பெண்ணை திட்டம், வைகை ஆற்றின் குறுக்கே வைகை அணை பெரியகுளத்தில் இருந்து பாலாற்றில் நீர் காவேரிப்பாக்கம், மகேந்திரமங்கலம் மாமண்டூர் ஏரிகளுக்கு நீர் செல்லும் வரை வாய்க்கால்கள், பாசனத்தில் கீழணை, மேலணை காட்பாடியில் சேயாற்றின் குறுக்கே ஒரு அணை புதுக்கட்டளை வாய்க்காலில் புள்ளம்பாடி வாய்க்காலில் என்று வாய்க்கால் தலைப்பில் ஏரிக்கரை நின்றுகொண்டு காமராஜர் அளித்த சிறிய பெரிய அணைகள் பலப்பல .


 

 

அதேபோல் கட்டளை கட்டளை முதல் கல்லணை வழியாக டெல்டா மாவட்டங்களுக்கு சென்று வாய்க்கால்கள் ஏரிகள் சீர்செய்ய அரசிடம் உள்ள கருத்துக்களை காமராஜர் போல வாய்க்கால் தலைப்பிலேயே ஏறி கரையிலேயே அரசு ஆணை இட்டால் ஒரு சொட்டு நீர் முக்கொம்பில் கொள்ளிடத்திற்கு திறந்துவிட வேண்டிய அவசியம் ஏற்படாது.
 

முதல்வர் இஸ்ரேல் செல்லும் முன் காவிரி பாசன பகுதிகளில் 10 நாள் நடைபயணம் சென்றால் நீர் மேலாண்மை 10 நாளிலேயே 100% வெற்றி பெறும் தமிழகத்தில் காவிரி ஜீவநதியாக மாறி டெல்டா மாவட்ட மக்களுக்கு செழிக்கும் என கூறியுள்ளார். 
 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

“சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல” - இ.பி.எஸ்.!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Expressing controversial opinion is not conducive to Indian sovereignty EPS

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். இதனையடுத்து பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திரமோடி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும். வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும், நாட்டின் உயர் ஆட்சிப் பதவியில் உள்ள பிரதமரும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல.

இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. அரசியல் கட்சித் தலைவர்களும், ஆட்சி அதிகாரத்தில் மாண்பைமிகு உயர் பதவியில் உள்ளவர்களும் இதுபோன்ற கருத்துகளைத் தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும், மத நல்லிணக்கத்திற்கும் நல்லது. அரசியல் கட்சித் தலைவர்களின் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளால் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், மத உணர்வுகளைத் தூண்டும் விதமாகவும் அமைகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்காக கண்ணியம் தவறிய இதுபோன்ற மத துவேச கருத்துகளை யார் பேசினாலும் அது, இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். நாட்டின் நலனுக்காக இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.