Skip to main content

“இல்லம் தேடி கல்வி.. இதற்கு அரசியல் சாயம் தேவையில்லை..” - ஜி.கே. வாசன்

Published on 01/11/2021 | Edited on 01/11/2021

 

GK Vasan comment about TamilNadu day

 

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நேற்று (31.10.2021) திருச்சி, சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி. கலந்துகொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு கருத்துகள் குறித்தும், செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஜி.கே. வாசன், “இல்லம் தேடி கல்வித் திட்டம் என்பது மாணவர்களின் எதிர்காலம். மாணவர்களின் கல்வி என்பது நாட்டின் வளர்ச்சி. இதற்கு அரசியல் சாயம் தேவையில்லை. தமிழ்நாடு தினம் குறித்து தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்கள், தமிழ் பற்றாளர்கள் மத்தியில் மாறுபட்ட கருத்து நிலவுகிறது. ஆகவே இது அனைவரையும் கலந்தாலோசித்து ஒத்த கருத்தை ஏற்படுத்த அரசு முயற்சிக்க வேண்டும்.

 

ஒருபக்கம் கரோனா தாக்கம் இன்னும் முடியவில்லை, மறுபுறம் டெங்கு மலேரியா பரவிவருகிறது. இந்த நேரத்தில் டாஸ்மாக் பார்களைத் திறப்பது நியாயமில்லை. இந்த முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியாக அறிவித்துள்ள நிலையில், அங்கு பல்லாயிரம் கோடியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தொடங்க இருப்பதாக தெரிகிறது. இது விவசாய பகுதிக்கு உகந்ததல்ல. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்.

 

முல்லைப் பெரியாறு அணையைத் திறந்து தண்ணீர் தர வேண்டியது அவசியம். அதேவேளையில், அணையில் நமது உரிமையை விட்டுக் கொடுக்கக்கூடாது. மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சசிகலா விவகாரம் குறித்து அதிமுகவுடன் கூட்டணியில் இருப்பதால் கருத்து கூறுவது முறையாக இருக்காது. அதிமுகவின் உள்விவகாரங்களில் தலையிட விரும்பவில்லை. ராஜீவ் கொலை குற்றவாளிகள் விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'தேர்தல் பணியைவிட சிறுத்தையை பிடிப்பதே முதல் பணி'-ஜி.கே.வாசன்

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
'The first task is to catch the leopard rather than the election task' - GK Vasan speech

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இரவில் நடமாடும் சிறுத்தையை பிடிக்கும் பணி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் நகரப் பகுதியில் உள்ள செம்மங்குளத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சிறுத்தை ஒன்று புகுந்தது. அந்த பகுதியில் சுற்றித் திரிந்த தெரு நாய்களை வேட்டையாடும் வகையில் சிறுத்தை ஓடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது குறித்து போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சிறுத்தையின் கால்தடத்தை வைத்து அதன் நடமாட்டத்தை வனத்துறையினர் உறுதி செய்தனர்.

தொடர்ந்து மூன்று நாட்களாக அந்த பகுதியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என வனத்துறை சார்பில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் பாதுகாப்பு கருதி இன்று (04/04/2024) அந்த உள்ள 9  பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

சிறுத்தை தேடுதல் வேட்டையில் முதல் நாள் கேமராவில் சிக்கிய அந்த சிறுத்தை இரண்டாவது நாள் சிக்கவில்லை என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியநாதபுரம் பகுதியில் நேற்று இரவு வனத்துறையினர் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பின் தொடர்ந்ததால் சிறுத்தையை கண்டுபிடிக்கும் பணியில் கடும் பாதிப்பு ஏற்பட்டதாகவும், எனவே சிறுத்தையை பிடிக்கும் வரை வனத்துறையினரை பொதுமக்கள் பின் தொடர்ந்து இடையூறு செய்ய வேண்டாம் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சிறுத்தையை தேடும் பணிக்கு கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு கேட்கவும் வனத்துறை முடிவு செய்துள்ளது. கூறைநாடு, செம்மங்குளம், ஆரோக்கியநாதபுரம், சித்தர்காடு என பல இடங்களுக்கு தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருப்பது வனத்துறையினருக்கு அதனை பிடிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

பாராளுமன்ற தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் பொது மக்களுக்கு அச்சத்தை கொடுத்துள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை பகுதியில் பிரச்சாரம் செய்ய வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், 'தேர்தல் பணியை விட சிறுத்தையை பிடிப்பதே முக்கியம். ஏனென்றால் வாக்காளர்கள், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வைப்பது அரசின் கடமை' என தெரிவித்தார்.

Next Story

த.மா.க தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ஜி.கே.வாசன் (படங்கள்)

Published on 01/04/2024 | Edited on 01/04/2024

 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்த நிலையில், நேற்று (31-03-24) தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில், தேர்தல் அறிக்கை மற்றும் தேர்தல் குறித்த ஒளிநாடாவை வெளியிட்டு, பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து பேசினார்.