Skip to main content

தேர்தல் முடியும் வரை வாயில் பிளாஸ்திரி ஒட்டி மவுன விரதம் கடைபிடித்தது ஏன்? ஜி.கே.மணி

Published on 25/04/2019 | Edited on 25/04/2019

 

வார்த்தைக்கு வார்த்தை வளர்ச்சி குறித்தும், 8 வழிச்சாலை குறித்தும் பேசும் அழகிரி அவர்கள் தேர்தல் முடியும் வரை வாயில் பிளாஸ்திரி ஒட்டிக் கொண்டு மவுன விரதம் கடைபிடித்தது ஏன்? என பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி கேள்வி எழுப்பியுள்ளார்.


 

gkmani



இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  
 

சென்னை - சேலம் இடையிலான எட்டு வழிச் சாலை திட்டத்தை ஆதரிப்பதாகக் கூறி 5 மாவட்ட உழவர்களுக்கு காங்கிரஸ் கட்சி பெருந்துரோகத்தை செய்திருக்கிறது. அதை நியாயப்படுத்துவதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இல்லாத காரணங்களை இருப்பதைப் போல சித்தரிப்பது, மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்.

 

திமுகவுடன் கூட்டணி அமைத்ததாலோ என்னவோ காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அவர்கள் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசத் தொடங்கியிருக்கிறார். காங்கிரஸ் கட்சி மட்டும் தான் வளர்ச்சிக்கு ஆதரவான கட்சி என்பதைப் போலவும், எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தால், ரூ.10,000 கோடி மதிப்பிலான அந்தத் திட்டம் வேறு மாநிலங்களுக்கு சென்று விடும் என்றும் பேசி வருகிறார். தங்கக் கத்தி என்பதற்காக அதை எப்படி வயிற்றில் குத்திக் கொள்ள முடியாதோ, அதேபோல் ரூ.10,000 கோடி மதிப்பிலான திட்டம் என்பதற்காக 8 வழிச் சாலைத் திட்டத்தை ஆதரித்து 10 ஆயிரம் விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. அப்படிப்பட்ட துரோகத்தை காங்கிரஸ் கட்சி வேண்டுமானால் செய்யும்; பாட்டாளி மக்கள் கட்சி ஒருபோதும் செய்யாது.



 

8 வழிச்சாலைத் திட்டத்தால் தான் தமிழகத்திற்கு வளர்ச்சி ஏற்படும் என்று பேசும் காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி ஓர் அடிப்படையான வினாவுக்கு விடையளிக்க வேண்டும். சென்னையிலிருந்து சேலத்திற்கு செல்ல ஏற்கனவே இரு தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. வாணியம்பாடியிலிருந்து திருப்பத்தூர், ஊத்தங்கரை, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மஞ்சவாடி வழியாக சேலம் செல்லும் 179-ஏ என்ற எண் கொண்ட தேசிய நெடுஞ்சாலையை ரூ.515 கோடி செலவில் நான்கு வழிப்பாதையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த சில மாதங்களில் இந்த பணிகள் முடிவடைந்தால்  சென்னையிலிருந்து சேலம் செல்ல மொத்தம் 3 தேசிய நெடுஞ்சாலைகள் இருக்கும். 3 நெடுஞ்சாலைகள்  இருக்கும் போது  நான்காவதாக மேலும் ஒரு நெடுஞ்சாலை தேவையா? அதுவும் குறிப்பாக 10,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பறித்து இப்படி ஒரு சாலை அமைப்பதை காங்கிரஸ் ஆதரிக்கிறதா?

 

சரியான இழப்பீடு கிடைத்தால் 8 வழிச்சாலைக்காக நிலம் வழங்க விவசாயிகள் தயாராக இருப்பதாக கே.எஸ். அழகிரி கூறியிருக்கிறார். இவர் எப்போது விவசாயிகளின் பிரதிநிதியாக மாறினார் என்பது தெரியவில்லை. விவசாயிகளை இவர் எப்போது சந்தித்து இதுகுறித்து கருத்துக் கேட்டார் என்றும் புரியவில்லை. தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே 5 மாவட்ட உழவர்கள் போராடி வரும் நிலையில், அவர்கள் அதிக பணத்துக்காகத் தான் போராடுகிறார்கள் என்று கூறுவதை விட, மிகவும் மோசமாக உழவர்களை கொச்சைப்படுத்த முடியாது. தங்களைக் கொச்சைப்படுத்தும் அழகிரியை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். அழகிரி விரும்பினால், 5 மாவட்ட உழவர்களிடம் அவரை நான் அழைத்துச் செல்கிறேன். அங்குள்ள உழவர்கள் அதிக விலைக்காகத் தான் போராடுவதாக கூறினால், அரசியலை விட்டே நான் விலகிக் கொள்கிறேன். இல்லாவிட்டால் அழகிரி விலகுவாரா?

 

‘‘ஆணைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு குதிரைக்கு குர்ரம்’’ என்பதைப் போல 8 வழிச்சாலைக்காக நிலங்கள் கையகப்படுத்தப்படுவதை எதிர்க்கும் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள்,  திண்டிவனம் & செஞ்சி - திருவண்ணாமலை ரயில் பாதைத் திட்டத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தப் பட்டதை எதிர்க்கவில்லையே? என்று அழகிரி வினா எழுப்பியுள்ளார். 8 வழிச்சாலை திட்டத்தையும், திண்டிவனம் - திருவண்ணாமலை ரயில் பாதை திட்டத்தையும் ஒப்பிடுவதை விட பெரிய அபத்தம் இருக்க முடியாது. 8 வழிச்சாலை திட்டம் வாழ்வாதாரத்தை பாதிக்கும் திட்டம் என்று விவசாயிகளால் எதிர்க்கப்படும் திட்டம் ஆகும். அதேநேரத்தில் திண்டிவனம் - திருவண்ணாமலை ரயில் பாதை அந்தப் பகுதியில் வாழ்வாதாரத்தை பெருக்கும் என்று உழவர்களால் வரவேற்றுப் பாராட்டப்பட்ட திட்டம் ஆகும். தங்கள் ஊருக்கு தொடர்வண்டி வர வேண்டும் என்பதற்காக பல ஊர்களில் உழவர்கள் தாங்களாகவே முன்வந்து நிலங்களை வழங்கியது காங்கிரசின் புதிய தலைவர் அழகிரிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

 





ஏற்கனவே மூன்று தேசிய நெடுஞ்சாலைகள் உள்ள நகருக்கு தேவையின்றி நான்காவதாக ஒரு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படுவதையும், அடிப்படை வசதிகளே இல்லாத பகுதியில் வளர்ச்சியை விரைவு படுத்துவதற்காக ரயில் பாதை அமைக்கப்படுவதையும் சமன்படுத்திப் பார்க்கும் அழகிரி போன்றவர்கள் தான் விவசாயிகளின் எதிரிகள். இந்த பாவத்தை அவராலும், காங்கிரசாலும் ஒருபோதும் கழுவ முடியாது.

 

வார்த்தைக்கு வார்த்தை வளர்ச்சி குறித்தும், 8 வழிச்சாலை குறித்தும் பேசும் அழகிரி அவர்கள் தேர்தல் முடியும் வரை வாயில் பிளாஸ்திரி ஒட்டிக் கொண்டு மவுன விரதம் கடைபிடித்தது ஏன்? 8 வழிச்சாலைக்கு ஆதரவாக பேசினால் விவசாயிகளின் கோபத்திற்கு ஆளாகி வாக்குகளை இழக்க வேண்டியிருக்கும் என்பதால் தானே? வாக்குகளை வாங்கும் வரை ஒரு பேச்சு.... வாக்குகளை வாங்கி முடித்த பின்னர் வேறு பேச்சு என்பது உழவர்களுக்கு இழைக்கப்படும் பெரும் நம்பிக்கை துரோகம் ஆகும். இதற்குக் காரணமான திமுக - காங்கிரஸ் அணியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இவ்வாறு கூறியுள்ளார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பத்திரம் தொடர்பான பதிவுகள் நீக்கம்; தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கேள்வி

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Congress question to Election Commission for Deletion of Electoral bond related records

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின.

நாளை முதல் தொடங்கும் மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று, அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. இதனால், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது.  இதற்கிடையே, பிரபல சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் வெளியிட்ட பதிவுகளை குறிப்பிட்டு, தேர்தல் நடத்தை மீறியுள்ளதால் அதனை நீக்குமாறு எக்ஸ் தளத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கூறியிருப்பதாவது, ‘தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக ஆம் ஆத்மி கட்சி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்ட 2 பதிவுகளையும், ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீகார் துணை முதல்வர் சம்ராத் செளத்ரி ஆகியோரின் 2 பதிவுகளையும் நீக்க வேண்டும். இந்த பதிவுகளை நீக்கவில்லை என்றால் எக்ஸ் தளத்தின் மீது தன்னார்வ நெறிமுறைகளை மீறியதாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியது . மேலும், சில பதிவுகளையும் குறிப்பிட்டு, அதனை நீக்க வேண்டும் என்றும் எக்ஸ் நிர்வாகத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Congress question to Election Commission for Deletion of Electoral bond related records

இது குறித்து எக்ஸ் நிர்வாகம், இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவில் உடன்பாடு இல்லை என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள பதிவுகளை தேர்தல் முடியும் வரை இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்தது. மேலும், வெளிப்படைத்தன்மை கருதி ஆணையத்தின் உத்தரவுகளை பொதுவெளியி்ல் வெளியிடுவதாகவும் எக்ஸ் நிர்வாகம் தெரிவித்தது.

இந்த நிலையில், தேர்தல் நன்கொடை பத்திரங்கள் தொடர்பான சில பதிவுகளை நீக்குமாறு எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது குறித்து காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சுப்ரியா ஸ்ரீநாத், “சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதை உறுதி செய்வது தேர்தல் கண்காணிப்புக் குழுவின் கடமையாகும். நடத்தை விதிகளை மீறும் போதும், வெறுப்பூட்டும் பேச்சுகள், மதக் குறிப்புகள் மற்றும் மோசமான மற்றும் மோசமான அறிக்கைகளை வெளியிடுபவர்கள் உட்பட, அவர்கள் தூக்கி எறியப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

ஆனால், தேர்தல் பத்திரம் தொடர்பான பிரச்சனையை எழுப்பிய ஒரு ட்வீட்டை நீக்க தேர்தல் ஆணையம் தேர்வு செய்தது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. தேர்தல் பத்திரங்கள் என்பது அரசாங்கத்தை மிகவும் சங்கடப்படுத்தும் ஒரு பிரச்சனை. மத்திய அரசுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் விவகாரத்தை, இவ்வாறு ஏன் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கூறினார்.

Next Story

“பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர்” - ராகுல் காந்தி! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
BJp RSS Organizations are against the policy of the country says Rahul Gandhi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. அக்கட்சியின் தொண்டர்களுக்கு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வீடியோ மூலம் பல்வேறு வேண்டுகோள்களை வெளியிட்டுள்ளார். அதில், “பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர். இவர்கள் நமது அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயக கட்டமைப்பை சிதைக்கின்றனர். அதே போன்று தேர்தல் ஆணையம் உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளின் கட்டமைப்பை அழிக்க நினைக்கின்றனர். எனவே பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும்.

காங்கிரஸ் தொண்டர்கள் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் தொண்டர்கள்தான் நாட்டின் பாதுகாவலர்கள். மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் சிறப்பான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. நாட்டு மக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்றி. பாஜகவையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.