Skip to main content

செந்தில்பாலாஜி மீது பெண் பரபரப்பு புகார்!

Published on 11/05/2019 | Edited on 11/05/2019

இடைத்தேர்தல் அரவக்குறிச்சி தொகுதியில் நடக்கவிருக்கும் நிலையில் பெண் ஒருவர் புகார் ஒன்றை செந்தில் பாலாஜி மீது அளித்துள்ளார். கரூர் அருகே குளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர், ராமலிங்கம். இவரது மனைவி தெய்வானை (62). இவர்களுக்கு குழந்தை இல்லை என்பதால், கோகுல் என்ற ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில், ராமலிங்கம் கடந்த 16 வருடங்களுக்கு முன்பு காலமாகி விட்டார். இவர்களுக்கு  சொந்தமாக விவசாய நிலம், காலியிடம் என பல  கோடிக்கு மேல் சொத்து உள்ளதாக கூறப்படுகிறது. 

 

senthil balaji



கடந்த 2011-ம் ஆண்டு, தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலரும் சேர்ந்து கோகுலை கடத்திச்சென்று, குடும்பச் சொத்தை அபகரித்துவிட்டதாக அப்போது புகார் ஒன்று எழுந்தது. இது தொடர்பாக, கரூர் குற்றவியல் நீதிமன்றம் எண் ஒன்றில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு சம்மந்தமாக கோகுல் வாக்குமூலம் அளித்தால், அது செந்தில் பாலாஜிக்கு இடைதேர்தலில்  பாதிப்பு ஏற்படுத்தும் என்றும் அரசியல் வட்டாரங்கள் கூறி வருகின்றனர். கோகுல், கடந்த சில வருடங்களாக கோவையில் தங்கி பணியாற்றி வருகிறார். அவரது மனைவியும் மகனும் அங்கேயே உடன் உள்ளனர். இதனிடையே, தனது தாயாரைப் பார்க்க கடந்த ஜனவரி மாதம் 30-ம் தேதி கரூருக்கு வந்துவிட்டுச் சென்றவர், அதன்பின் மாயமாகி விட்டதாக சொல்லப்படுகிறது. 

கோவை வீட்டிலும் இல்லை. இதுதொடர்பாக கரூர் வெங்கமேடு காவல் நிலையத்தில், 'என் மகனை காணவில்லை' என தெய்வானை புகார் அளித்துள்ளார்.  இந்தப் புகாரின்மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கடந்த 6-ம் தேதி ஆட்கொணர்வு மனு ஒன்றையும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தெய்வானை தாக்கல் செய்து இருக்கிறார். வழக்கு விசாரணையின்போது, 'தனக்கு எதிராக சாட்சியமளித்தால் பாதிப்பு ஏற்படும் எனக் கருதி, செந்தில் பாலாஜியும் அவரது ஆட்களும் தான் தனது மகனை கடத்தி வைத்திருக்க வேண்டும். எனவே, எனது மகனையும் எனது சொத்தையும் மீட்டுத்தர வேண்டும்' எனவும் கூறியுள்ளார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

காணொளியில் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜி; 33வது முறையாக நீட்டித்த நீதிமன்றம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Senthil Balaji featured in the video; Court extended for the 33rd time

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாவான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு.முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், செந்தில் பாலாஜி இன்று காணொளி மூலம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 22ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்பொழுது வரை 33வது முறையாக அவருடைய நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

'பேராசை தான் காரணம்'-விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர் குற்றச்சாட்டு

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
'Greed is the reason'- Congress candidate interview with Vilavanko

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

மக்களவை தேர்தலோடு கன்னியாகுமரியில் விளவங்கோடு இடைத்தேர்தலும் நடைபெற இருக்கிறது. அதற்கான பரப்புரைகளிலும் அரசியல் கட்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் தாரகை கத்பர்ட்டைக் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில்,''முன்பு விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி இருந்தார். அவர் செய்ய வேண்டிய கடமைகளை உண்மையாக தெளிவாக செய்திருக்கிறார். ஏனென்றால் அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருக்கின்ற வரைக்கும் மிக தெளிவாகத்தான் மக்களுக்கான பணியை செய்தார். இன்றைக்கு அவர் பேராசை காரணமாக காங்கிரசை விட்டு பாஜகவிற்கு சென்றுள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருக்கும் வரை முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேட்டு அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறார். அதில் மக்கள் மத்தியில் என்ற மாற்றுக் கருத்தும் கிடையாது. பாஜக செய்யும் பொய்ப் பிரச்சாரம் எடுபடப் போவதில்லை. அதை நீங்கள் ஜூன் நான்காம் தேதி பார்க்கத்தான் போகிறீர்கள்'' என்றார்.