Skip to main content

தமிழகத்தில் வேலை நிறுத்த போராட்டம்... எதிர்க்கட்சிகள் பங்கேற்பு... வங்கி சேவைகள் பாதிப்பு... (படங்கள்)

Published on 08/01/2020 | Edited on 08/01/2020



 

புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும், தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதிய வரம்பை அதிகரிக்க வேண்டும், நாட்டில் வேலைவாய்ப்பை பெருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று எதிர்க்கட்சிகள் தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று வேலைநிறுத்தம் நடைபெற்றது. ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.டி.யூ.சி, எச்.எம்.எஸ், சி.ஐ.டி.யூ., உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன.

 

General strike in Tamil Nadu



பொது வேலை நிறுத்தத்தை முன்னிட்டு திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் அருகே மறியலில் ஈடுபட்ட ஏஐயூடிசி சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
 

குமுளி, தமிழக- கேரள எல்லையில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தேனி, நேரு சிலை அருகே பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னிட்டு தொழிற் சங்கங்கள் சார்பில் சாலை மறியலில் ஈடுபட்ட 99 பேர் கைது செய்யப்பட்டனர். புதுக்கோட்டையில்  9 இடங்களில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சுமார் 800 பேர் கைது செய்யப்பட்டனர்.


 

General strike in Tamil Nadu


புதுக்கோட்டை நகரில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு இந்திய கம்யூ. மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் வே. துரைமாணிக்கம், மார்க்சிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வீ. நாகராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
 

இதேபோல கந்தர்கோட்டை, கறம்பக்குடி, அன்னவாசல், விராலிமலை, திருமயம், பொன்னமராவதி உள்ளிட்ட 9 மையங்களில் மறியல் நடைபெற்றது. ஆவுடையார்கோயிலில் மட்டும் ஆர்ப்பாட்டம் நடத்தி கலைந்து சென்றனர்.

 

General strike in Tamil Nadu



புதுக்கோட்டை நகரில் வங்கி ஊழியர் சங்கத்தினரும், அரசுப் பணியாளர் சங்கத்தினரும் தனித்தனியே ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். நெல்லை மாநகரில் நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் 61 பெண்கள் உள்பட 297 பேர் கைது செய்யப்பட்டனர். அனைத்து தொழில் சங்கம் சார்பில் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம், வேப்பமூடு  சந்திப்பு ஆகிய இடங்களில் மறியலில் ஈடுபட்ட முன்னாள் எம்.ப் ஹெலன் டேவிட்சன் மாவட்ட காங்கிரஸ் தலைவர்  ராதாகிருஷ்ணன் மா. கமயூ மாவட்ட செயலாளர் செல்லசாமி உள்ளிட்ட 300  பேர் கைது செய்யப்பட்டனர்.
 

கோவை மாவட்டத்தில் இருந்து திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் கேரள மற்றும் தமிழக பஸ்கள் நிறுத்தப்பட்டு உள்ளது. கோவை, வால்பாறை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் இன்று மறியல் போராட்டமும் நடைபெற்றது.


 

General strike in Tamil Nadu



திருப்பூரில் ஏ.ஐ.டி.யூ.சி., தி.மு.க. உள்ளிட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் 50 சதவீத ஆட்டோக்கள் ஓடவில்லை. நீலகிரி மாவட்டத்திலும் ஆட்டோ டிரைவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
 

தமிழகத்தில் இந்த போராட்டத்துக்கு தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்தன.
 

வேலைநிறுத்த போராட்டத்தால் மத்திய அரசின் அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. இந்த வேலைநிறுத்தத்தில் வங்கி ஊழியர்கள், முழுமையாக பங்கேற்றதால் நாடு முழுவதும் வங்கி சேவை கடுமையாக பாதித்தது. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் கிராமங்களிலும் வங்கிகள் திறந்து இருந்தபோதிலும் சேவை நடைபெறவில்லை. 

 

ஈரோட்டில் கம்யூனிஸ்ட் கட்சி தொழிற் சங்கத்தின் மாவட்டச் செயலாளரான சின்னசாமி தலைமையில் மாபெரும் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் வங்கி ஊழியர்கள் அரசு பணியாளர்கள் ஆட்டோ தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு பொதுமக்களும் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
 

கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் தொகுதி எம்பி திருப்பூர் சுப்பராயன் தலைமையில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. பிறகு போலீசார் எம்பி சுப்பராயன் உட்பட 4500 பேரை கைது செய்தனர். காஞ்சிபுரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம் மறியல் நடத்தினார்கள் இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இராமநாதபுரத்தில் அஞ்சல் அலுவலகம் முன்  மறியல் போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரியில் வேலை நிறுத்த போராட்டம், மறியல் போராட்டம் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று நடந்துள்ளது. திண்டுக்கல் மத்திய பா.ஜ.க. மோடி அரசை கண்டித்து  தொழிற்சங்கங்களின் சார்பில் நடைபெற்ற மறியலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 700 பேர் கைது  செய்யப்பட்டுள்ளனர்.




செய்தி: ஜீவா தங்கவேல்
படங்கள் : எஸ்.பி.சுந்தர், அசோக்குமார், குமரேஷ்


 

சார்ந்த செய்திகள்

Next Story

“வாக்காளர்கள் கவனத்திற்கு...” - சத்யபிரதா சாகு முக்கிய தகவல்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
“Attention Voters...” - Satyapratha Sahu Important Information

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தமிழ்நாட்டில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6.32 கோடி ஆகும். இதில் முதல் தலைமுறை வாக்காளர்களின் எண்ணிக்கை 10.92 லட்சம் ஆகும். 80 வயதிற்கு மேல் உள்ள வாக்காளர்கள் 6 லட்சத்து 14 ஆயிரத்து 2 பேர் ஆவர். ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.06 கோடியும், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.17 கோடியும், திருநர் வாக்காளர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 467 ஆகும்.

தமிழ்நாட்டில் மொத்தம் 68 ஆயிரத்து 321 வாக்கு சாவடி மையங்கள் உள்ளன. மொத்த வாக்குச்சாவடிகளில் 44 ஆயிரத்து 800 வாக்குச்சாவடிகள் (65 சதவிகிதம்) வெப் காஸ்டிங் முறையில் நேரடியாக தேர்தல் ஆணையத்தின் மூலம் கண்காணிக்கப்பட உள்ளன. 3.32 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர். தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவலர்களும், கேரளா மற்றும் ஆந்திராவை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்களும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 

“Attention Voters...” - Satyapratha Sahu Important Information

காலை 7 மணி முதல் மாலை 6 வரை வாக்குப்பதிவு நடைபெறும். மாலை 6 மணியிலிருந்து வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அனைவரும் வாக்களிக்க ஏதுவாக நடவடிக்கை எடுக்கப்படும். அதாவது மாலை 6 மணிக்குள் வரிசையில் வந்து நிற்பவர்கள் வாக்களிக்கலாம். கடைசி வாக்காளர் வாக்களிக்கும் வரை முழுமையாக வாய்ப்பு வழங்கப்படும். தமிழகத்தின் 39 தொகுதிகளில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்கள் எண்ணிக்கை 950 ஆகும். இதில் ஆண் வேட்பாளர்கள் 874 பேரும், பெண் வேட்பாளர்கள் 76 பேரும் ஆவர்.

வாக்குச்சாவடி வளாகத்திற்குள் செல்போன் எடுத்துச் செல்லலாம். ஆனால் வாக்குச்சாவடிக்கு உள்ளே செல்போன் அனுமதிக்கப்படாது. வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு புத்தகம், மருத்துவ காப்பீட்டு அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட 13 வகையான அரசு ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம். மாற்றுத்திறனாளிகள், முதியோர் மற்றும் கர்ப்பிணிகள் வாக்களிக்க ஏதுவாக வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாற்றுத்திறனாளிகள், முதியோர், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் 1950 என்ற எண்ணுக்கு அழைத்தால் வாக்களிக்க இலவசமாக வாகனம் அனுப்பி வைக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

முதல்கட்ட வாக்குப்பதிவு; ஏற்பாடுகள் தீவிரம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
First Phase Voting; Preparations are intense

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

முதற்கட்ட தேர்தலில் தமிழகத்தின் 950 வேட்பாளர்கள் உள்பட 1,625 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த முதல் கட்ட தேர்தலில் மத்திய அமைச்சர்களான நிதின் கட்கரி, கிரன் ரிஜிஜு, எல். முருகன், ஜிதேந்திர சிங், சர்வானந்த் சோனோவால், அர்ஜுன்ராம் மேக்வால் மற்றும் சஞ்சீவ் பல்யான் என 8 பேர் போட்டியில் உள்ளனர். தெலங்கானாவின் முன்னாள் ஆளுநரும், புதுச்சேரியின் பொறுப்பு துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் களத்தில் உள்ளார். மேலும் திரிபுரா முன்னாள் முதல்வர் பிப்லப் குமார் தேவ், அருணாசலப் பிரதேச முன்னாள் முதல்வர் நபம் துகி, தமிழகத்தின் முன்னாள முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

அதே சமயம் முதற்கட்ட தேர்தலுடன் தமிழகத்தின் விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நாளை நடைபெறுகிறது. இதே போன்று திரிபுரா மாநிலம் ராம்நகர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் 39 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் 68 ஆயிரத்து 320 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன. தமிழகத்தில் பதற்றமான 45 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா மூலம் தொடர்ந்து கண்காணிக்க தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மிகவும் பதற்றமான 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகளில் நவீன ஆயுதங்களுடன் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய சூழலில் தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணியும் தீவிரமடைந்துள்ளது.