Advertisment

பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவி: அறிவாலயத்தில் மனுத் தாக்கல்!

Advertisment

தி.மு.க.வின் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளை நிரப்புவதற்காக கட்சியின் பொதுக்குழுவருகிற 9ம் தேதி வீடியோ கான்பரன்ஸ் மூலம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கு போட்டியிட விரும்புகிறவர்கள் அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு பெற்றுக்கொண்டு வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, விருப்ப மனுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது.

பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். ஏற்கனவே பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் நேற்று அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘திமுகவின் பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கான தேர்வு என்பது தேர்தலா அல்லது ஒருமித்த தேர்வா என்பது குறித்து ஓரிரு நாளில் தெரிய வரும்’’ என்று கூறினார்.

t.r.balu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe