தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த் தலைமையில் செப்டம்பர் 15ஆம் தேதி திருப்பூரில் (“விஜயகாந்த் பிறந்தநாள் விழா, கட்சியின் பதினைந்தாம் ஆண்டு துவக்க நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா”) முப்பெரும் விழா நடைபெற இருக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.