Skip to main content

“இதில் என் உயிரே போனாலும் பரவாயில்லை” பாஜக நிர்வாகிக்கு எதிராக காயத்ரி புகார்

Published on 30/01/2023 | Edited on 31/01/2023

 

Complaint at Gayathri Raghuram Police Station

 

பாஜகவின் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவராக காயத்ரி ரகுராம் செயல்பட்டு வந்த நிலையில், கடந்த டிசம்பரில் அவர் அந்த பொறுப்பிலிருந்து 6 மாதங்களுக்கு நீக்கப்படுவதாகத் தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பாஜகவிலிருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவித்தார். இதன் பின் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் காயத்ரி ரகுராம் ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட்டால் அவரை எதிர்த்து நான் நிற்பேன் என்றும் கூறியிருந்தார். 

 

இந்நிலையில், புகைப்படத்தை தவறாகச் சித்தரித்தது குறித்து தமிழக பாஜகவின் ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகி பாபு என்பவர் மேல் காவல்நிலையத்தில் காயத்ரி ரகுராம் புகாரளித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த போது பேசிய அவர், “பாஜகவில் இருக்கும் போது எனக்கு பாதுகாப்பு இல்லை என நான் வெளியேறி வந்தேன். பாஜகவில் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. மாநிலத் தலைவர் அண்ணாமலை அவரது வார்ரூம் என்ற கூட்டத்தை வைத்துக்கொண்டு உள்ளார். அவர்கள் ஆடியோ, வீடியோ என்பதை தாண்டி இன்று மார்ஃபிங் செய்து ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளனர். மிகக் கொச்சையாக இருக்கும் அதைக் குறித்து பொதுவெளியில் சொல்ல முடியாத ஒரு சூழ்நிலையில் உள்ளேன். அது ட்விட்டரோடு முடிந்துள்ளது. 

 

யோசித்துப் பாருங்கள். ஒரு பெண்ணாக நான் இதை எவ்வாறு எதிர்கொள்வேன். அதற்காக சம்பந்தப்பட்ட நபர் மீது புகார் அளிக்க வந்துள்ளேன். மிக வருத்தமாக உள்ளது. கட்சியில் இருக்கும் போது எவ்வளவு உழைத்திருக்கிறேன் என்பது கட்சியினருக்கு தெரியும். அண்ணாமலையின் செயல்களுக்கு விமர்சனத்தை நாம் கூறும்பொழுது, அதற்கு பதில் விமர்சனமாக அளிக்காமல் மிகவும் கொச்சையாக என்னைப் பற்றி பேசிக்கொண்டுள்ளார்கள்.

 

எட்டு வருடங்களாக பாஜகவில் இருந்துள்ளேன். ஆனால், இவ்வளவு வருத்தத்தை உண்டு பண்ணியது இல்லை. அவர் வந்த பிறகு ஏகப்பட்ட விஷயங்கள் நடக்கிறது. கடைசி இரண்டு வருடங்களாக இம்மாதிரியான அச்சுறுத்தல்கள் எனக்கு மட்டும் இல்லை, கட்சியில் அதிகமான பேருக்கு உள்ளது. அதை வெளியே சொல்வதற்கு பலரும் பயப்படுகிறார்கள். ஆனால், எனக்கு பயம் இல்லை. என் உயிர் போனாலும் பரவாயில்லை. யாராவது ஒருவர் குரல் எழுப்பினால் தான் இச்செயல்கள் நிற்கும், அல்லது இச்செயல்கள் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கும். அச்சுறுத்தல்கள் இருந்து கொண்டே இருக்கும்” எனக் கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.