Skip to main content

“இதில் என் உயிரே போனாலும் பரவாயில்லை” பாஜக நிர்வாகிக்கு எதிராக காயத்ரி புகார்

Published on 30/01/2023 | Edited on 31/01/2023

 

Complaint at Gayathri Raghuram Police Station

 

பாஜகவின் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவராக காயத்ரி ரகுராம் செயல்பட்டு வந்த நிலையில், கடந்த டிசம்பரில் அவர் அந்த பொறுப்பிலிருந்து 6 மாதங்களுக்கு நீக்கப்படுவதாகத் தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பாஜகவிலிருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவித்தார். இதன் பின் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் காயத்ரி ரகுராம் ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட்டால் அவரை எதிர்த்து நான் நிற்பேன் என்றும் கூறியிருந்தார். 

 

இந்நிலையில், புகைப்படத்தை தவறாகச் சித்தரித்தது குறித்து தமிழக பாஜகவின் ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகி பாபு என்பவர் மேல் காவல்நிலையத்தில் காயத்ரி ரகுராம் புகாரளித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த போது பேசிய அவர், “பாஜகவில் இருக்கும் போது எனக்கு பாதுகாப்பு இல்லை என நான் வெளியேறி வந்தேன். பாஜகவில் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. மாநிலத் தலைவர் அண்ணாமலை அவரது வார்ரூம் என்ற கூட்டத்தை வைத்துக்கொண்டு உள்ளார். அவர்கள் ஆடியோ, வீடியோ என்பதை தாண்டி இன்று மார்ஃபிங் செய்து ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளனர். மிகக் கொச்சையாக இருக்கும் அதைக் குறித்து பொதுவெளியில் சொல்ல முடியாத ஒரு சூழ்நிலையில் உள்ளேன். அது ட்விட்டரோடு முடிந்துள்ளது. 

 

யோசித்துப் பாருங்கள். ஒரு பெண்ணாக நான் இதை எவ்வாறு எதிர்கொள்வேன். அதற்காக சம்பந்தப்பட்ட நபர் மீது புகார் அளிக்க வந்துள்ளேன். மிக வருத்தமாக உள்ளது. கட்சியில் இருக்கும் போது எவ்வளவு உழைத்திருக்கிறேன் என்பது கட்சியினருக்கு தெரியும். அண்ணாமலையின் செயல்களுக்கு விமர்சனத்தை நாம் கூறும்பொழுது, அதற்கு பதில் விமர்சனமாக அளிக்காமல் மிகவும் கொச்சையாக என்னைப் பற்றி பேசிக்கொண்டுள்ளார்கள்.

 

எட்டு வருடங்களாக பாஜகவில் இருந்துள்ளேன். ஆனால், இவ்வளவு வருத்தத்தை உண்டு பண்ணியது இல்லை. அவர் வந்த பிறகு ஏகப்பட்ட விஷயங்கள் நடக்கிறது. கடைசி இரண்டு வருடங்களாக இம்மாதிரியான அச்சுறுத்தல்கள் எனக்கு மட்டும் இல்லை, கட்சியில் அதிகமான பேருக்கு உள்ளது. அதை வெளியே சொல்வதற்கு பலரும் பயப்படுகிறார்கள். ஆனால், எனக்கு பயம் இல்லை. என் உயிர் போனாலும் பரவாயில்லை. யாராவது ஒருவர் குரல் எழுப்பினால் தான் இச்செயல்கள் நிற்கும், அல்லது இச்செயல்கள் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கும். அச்சுறுத்தல்கள் இருந்து கொண்டே இருக்கும்” எனக் கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.