மகாத்மா காந்தியின் 72 வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை தலைமைச் செயலகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஆகியோர் காந்தி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர், தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாசிக்க தொடர்ந்து அமைச்சர்கள், அதிகாரிகள், தலைமைச் செயலக ஊழியர்கள் அனைவரும் திரும்ப கூறினர்.
மகாத்மா காந்தி நினைவு தினம். உறுதிமொழி ஏற்ற அமைச்சர்கள்..! (படங்கள்)
Advertisment