Advertisment

மாநில துணைப் பொதுச்செயலாளர் நீக்கம்... பா.ம.க. தலைமை அறிவிப்பு! 

ramadoss g k mani anbumani ramadoss

கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டு வருவதால் மாநில துணைப் பொதுச்செயலாளர் பரசுராமன் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திண்டுக்கல் மாவட்டம் நாகல்நகர் கிராமத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் இரா.பரசுராமன் கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டு வருவதால், இன்று (23.07.2020) வியாழக்கிழமை முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் நீக்கப்படுகிறார்.

Advertisment

பாட்டாளி மக்கள் கட்சியினர் அவருடன் எவ்வகையிலும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு கூறியுள்ளார்.

anbumani ramadoss pmk Ramadoss
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe