Skip to main content

“வரும்காலத்தில் இளைஞர்கள் தான் ஆளப்போகிறார்கள்..” - திமுக மாநகர செயலாளர் ராஜாப்பா

Published on 19/09/2022 | Edited on 19/09/2022

 

"In the future only the youth will rule.." - DMK city secretary Rajappa

 

தமிழகம் முழுவதும் திமுகவில் இளைஞர் அணி சார்பில் திராவி மாடல் பயிற்சி பாசறைக் கூட்டம் நடந்து வருகிறது. அந்தவகையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் சார்பில் இளைஞர் அணியின் திராவிட மாடல் பயிற்சி பாசறைக் கூட்டம் வருகிற 24-ம் தேதி திண்டுக்கல்லில் நடக்க இருக்கிறது. அதற்காக திண்டுக்கல் மாநகரில் உள்ள 48 வார்டுகளில் இருக்கும் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு பகுதியில் உள்ள பகுதி செயலாளர்கள் தலைமையில் மாநகர செயலாளரும், மாநகர துணை மேயருமான ராஜப்பா, திராவிட மாடல் பயிற்சி கூட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி வருகிறார். இதில் கிழக்கு பகுதி செயலாளர் ராஜேந்திரகுமார் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநகர 17வது வார்டு கவுன்சிலர்களான வெங்கடேஷ் உள்பட பல கவுன்சிலர்கள், மாநகர பொறுப்பாளர் சரவணன் மற்றும் பகுதி செயலாளர்கள் இளைஞர் அணி பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். 

 

இதில் கலந்து கொண்டு பேசிய மாநகர செயலாளர் ராஜாப்பா, “திராவிட மாடல் பயிற்சிக் கூட்டத்திற்கு ஒவ்வொரு வார்டுகளில் இருந்தும் இளைஞர் அணியினர் மூன்று பேர், மாணவ அணியினர் மூன்று பேர் என ஆறு பேரை தேர்வு செய்து திராவிட பயிற்சி பாசறைக் கூட்டத்திற்கு அழைத்து வர வேண்டும். அங்கு தலைமை கழகத்திலிருந்து வரக்கூடிய நிர்வாகிகள் திராவிட மாடல் பயிற்சியை பற்றி விளக்குவார்கள். அதன் மூலம் அந்த இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் பகுதியில் உள்ள இளைஞர்களை கட்சியில் சேர்க்க வேண்டும். இதில் எந்த ஒரு கருத்து வேறுபாடும் இருக்கக் கூடாது. 

 

கட்சியில் இளைஞர்களையும், மாணவர்களையும் சேர்க்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் தான் செயல்பட வேண்டும். எதிர்க்கட்சியினர் அடாவடி செய்து உங்கள் பகுதியில் உள்ள இளைஞர்களை, மாணவர்களை இழுக்க பார்ப்பார்கள் அதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது. நம் முதல்வர் ஸ்டாலினே இளைஞர் அணியில் இருந்து வந்து தான் தற்பொழுது முதல்வராகி மக்கள் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வருகிறார். வருங்காலத்தில் இளைஞர்களும், மாணவர்களும் தான் மாநகரத்தை ஆளவும் போகிறார்கள். அதனால் இளம் இரத்தங்களை கட்சியில் சேர்க்க வேண்டும்” என்று கூறினார்.

 

அதைத் தொடர்ந்து திராவிட மாடல் பாசறை கூட்டத்திற்கான விண்ணப்ப படிவங்களை கவுன்சிலர்கள் மற்றும் பொறுப்பாளர்களிடம் மாநகர செயலாளரும், பகுதி செயலாளரும் வழங்கினார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

திண்டுக்கல்லில் காவி நிறத்தில் வந்தே பாரத்?

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மதுரையில் இருந்து பெங்களூருக்கு காவி நிறத்தில் வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மக்களவை தேர்தல் முடிந்தவுடன் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும் எனவும் கூறப்படுகிறது. மதுரை பெங்களூரு இடையே 435 கிலோமீட்டர் தூரத்தையும் 5.30 மணி நேரத்தில் வந்தே பாரத் கடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.