Skip to main content

"புதுச்சேரியில் நாளை முழு ஊரடங்கு" -முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு!

Published on 17/08/2020 | Edited on 17/08/2020

 

puducherry cm narayanasamy

 

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்திலுள்ள முதல்வர் அலுவலகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் சுற்றுலாத்துறை மற்றும் மீன்வளத்துறை ஆகிய இரு துறைகளில் நடைபெற இருக்கும் பணிகள் குறித்தும், பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்தும் கலந்தாய்வு கூட்டம் இன்று (17.08.2020) மதியம் நடைபெற்றது.  

 

இக்கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், தலைமைச் செயலாளர் அஸ்வனிகுமார் மற்றும் நிதித்துறை, மீன்வளத்துறை, சுகாதாரத்துறை,  தொழில்துறை செயலாளர்கள்,  இயக்குனர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

முன்னதாக முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோ செய்தி அறிக்கையில், புதுச்சேரியில் கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதற்கு காரணம், மக்கள் எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் விழிப்புணர்வுடன் இல்லை. தனிமைப்படுத்தி கொள்ளாததால் தற்போது அதிகரித்து வருகின்றது. இதனால் வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டவர்களைக் கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் நோய்ப் பரவலைத் தடுக்கும் விதமாக புதுச்சேரியில் நாளை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது. நாளை  காலை 6 மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். மருந்தகங்கள், பாலகம் தவிர அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருக்கும். நாளை மக்கள் நடமாட்டத்தைப் பொறுத்து மாற்றம் செய்யப்படும்.  

 

ஏ.ஃஎப்.டி மில் விவகாரத்தில் அரசுக்கு நெருக்கடி கொடுத்ததால்தான் மில்லை மூடும் நிலைக்கு வந்தோம். துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மத்திய அரசுக்கு கோப்புகளை அனுப்பி  மில்லை மூட கூறியுள்ளார். மூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதே அரசு கோரிக்கை. துணைநிலை ஆளுநர் தொடர்ந்து அரசு எந்தத் தொழில் நிறுவனங்களும் நடத்தக்கூடாது என்று மூடுவிழா நடத்தி வருகிறார். அதற்கு எதிராக நாங்கள் போராடி வருகிறோம். ஏ.ஃஎப்.டி மில் மூடுவதற்கு முழு காரணமே துணைநிலை ஆளுநர் தான். 

 

துணைநிலை ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரியின் வளர்ச்சித் திட்டங்களைத் தடுத்து நிறுத்துகிறார் என்று அனைத்து மக்களுக்கும் தெரியும். மாநில அரசின் அதிகாரத்தில் துணைநிலை ஆளுநர் தலையீடு உள்ளதாக மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளேன். இது குறித்து நீதிமன்றம் செல்லவும் தயாராக உள்ளோம். இவ்வாறு கூறியுள்ளார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.